கார்த்திகை தீபம் சீரியல் : அபிராமியை தீர்த்துக்கட்ட ரவுடிகளை அனுப்பும் ஐஸ்வர்யா... காப்பாற்றினாரா கார்த்தி?
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா அபிராமியை தீர்த்து கட்ட முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
Karthigai deepam Serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி காஞ்சிபுரம் கோவிலில் இருக்க ஐஸ்வர்யா அபிராமியை தீர்த்து கட்ட முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது மீனாட்சி ஐஸ்வர்யாவின் அம்மா ராஜேஸ்வரியின் முகத்தை மூடி அடி வெளுத்தெடுத்து அனுப்ப, அவர் ஐஸ்வர்யாவிடம் சென்று நடந்த விஷயத்தை சொல்லி, தீபாவும் மைதிலியும் இப்படி பண்ணி இருக்க வாய்ப்பிருக்கு என்று சொல்ல, ஐஸ்வர்யா அவங்க ஏன் அப்படி பண்ணனும் என்று சொல்கிறாள்.
zee Tamil Karthigai deepam serial
மீனாட்சிக்கு இன்னும் கோபம் அடங்காமல் இருக்க, ரியா தனியாக சிக்க அவளையும் போட்டு வெளுத்தெடுக்க இதை பார்க்கும் தீபா, மீனாட்சியை கூட்டி சென்று விடுகிறாள், மறுபக்கம் அபிராமி கோவிலை சுத்தம் செய்து கொண்டிருக்க, அதை பார்த்து பூசாரி உங்களுக்கு என்னமா பிரச்சனை சொல்லுங்க தீர்த்து வைக்க முயற்சி செய்யுறேன் என்று சொல்கிறார். ஆனால் அபிராமி நீங்க தங்க இடம் கொடுத்ததே போதும் என்று சொல்கிறார்.
இதையும் படியுங்கள்... Aadujeevitham Box Office : பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் ஆடுஜீவிதம்... மூன்றே நாட்களில் இத்தனை கோடி வசூலா?
Karthigai deepam serial Update
பிறகு ஐஸ்வர்யாவும் ரியாவும் ரவுடி ஒருவனுக்கு பணத்தை கொடுத்து நாங்க சொல்லும் போது அபிராமி கதையை முடிச்சிடு என்று சொல்கின்றனர். எதுக்கு வெய்ட் பண்ணனும் கோவிலில் வைத்தே கொன்னுடுறேனன் என்று ரவுடி சொல்ல, ஐஸ்வர்யா கோவில் வைத்து பண்ணா பெரிய பிரச்சனையாகும் என்று சொல்லி விடுகிறாள்.
இதனையடுத்து தீபா அபிராமிக்காக வேண்டுதலை நிறைவேற்ற கோவிலுக்கு செல்வதாக கார்த்தியிடம் சொல்ல, அவன் அம்மா மனசு வருத்தத்தில் இருந்தா ஒரு கோவிலுக்கு போவாங்க அந்த கோவில் தெரியுமா என்று கேக்க, தீபா தெரியாமல் முழிக்க, மீனாட்சியிடம் கேட்க அவளும் தெரியாமல் முழிக்கிறாள். பிறகு தீபா, மீனாட்சி மைதிலி ஆகியோர் கோவிலுக்கு கிளம்பி வருகின்றனர். தீபா அங்கப்ரசாதனம் செய்து கொண்டிருக்கிறாள்.
Karthigai deepam serial Today Episode
அபிராமியை கோவிலில் பார்க்கும் துப்புரவு பணியாளர் ராணிக்கு தகவல் கொடுக்க, ராணி கார்த்திக்கு தகவல் கொடுக்க அவன் உடனடியாக கோவிலுக்கு கிளம்பி செல்கிறான், அதே போல் கோவிலில் மீனாட்சியை பார்த்த உறவினர் பெண் ஒருவரும் அபிராமியை காஞ்சிபுரம் கோவிலில் பார்த்ததாக சொல்ல, இவங்களும் காஞ்சிபுரத்துக்கு கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... வாணிபோஜன், பிரியா பவானி சங்கர் பாணியில்... சீரியலில் இருந்து சினிமாவுக்கு தாவிய ‘கார்த்திகை தீபம்’ ஆர்த்திகா