கார்த்திகை தீபம் சீரியல் : ரயிலில் அடிபட்டு கிடந்தது அபிராமியா? அடையாளம் காண வந்த கார்த்திக்; நடந்தது என்ன?
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் டெட் பாடியை பார்த்து அபிராமியா அது என பார்க்க போன போன நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
Karthigai deepam serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் டெட் பாடியை பார்த்து அபிராமியா அது என பார்க்க போன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
zee Tamil Karthigai deepam serial
அதாவது, கார்த்திக் பயங்கர பதற்றத்துடன் டெட் பாடியை பார்க்க, அது அபிராமி இல்லை என்று தெரிந்து நிம்மதி அடைகிறான், உடனே வீட்டிற்கு வந்து விஷயத்தை சொல்ல, எல்லாரும் சந்தோசப்பட ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் கடுப்பாகின்றனர். இதனையடுத்து கார்த்திக் மீண்டும் அபிராமியை தேடி அலைகிறார்.
இதையும் படியுங்கள்... Anna Serial: கடத்தப்பட்ட கனி; காப்பாற்றிய ஷண்முகம்; சௌந்தரபாண்டியின் அடுத்த பிளான் என்ன? அண்ணா சீரியல் அப்டேட்
Karthigai deepam serial Update
அப்போது வழியில் ஒரு பெண்மணி பார்க்க, அபிராமியை போலவே நடந்து செல்ல, கார்த்திக் அது அம்மா என நினைத்து ஓடி போய் பேச, அது அபிராமி இல்லை, வேறு யாரோ என்பது தெரிய வருகிறது. பிறகு மீண்டும் அபிராமியை தேடி செல்ல, வழியில் காரின் குறுக்கே கார்த்தி பாட வைத்த துப்புரவு பணியாளர் ராணி வந்து விட கார்த்திக் அவரை காப்பாற்றுகிறான்.
Karthigai deepam serial Today Episode
அடுத்து கோவிலுக்கு வரும் கார்த்திக் கடவுளிடம் அபிராமி கிடைக்க வேண்டும் என பிராத்தனை செய்கிறான். மேலும் அம்மாவுடனான சிறு வயது நினைவுகளை நினைத்து பார்த்து கண் கலங்குகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Siddharth and Aditi Rao Engaged: அதிதி ராவுடன் திருமணம் நடக்கவில்லை! நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த சித்தார்த்!