கார்த்திகை தீபம் சீரியல் : கார்த்திக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐஸ்வர்யா... செம்ம டோஸ் கொடுத்து விரட்டிய அபிராமி
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மில்லில் சாப்பாடு சரியில்லை என்று வாக்குவாதம் செய்து தொழிலாளர்களுக்கு கார்த்தி நீதி வாங்கி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மில்லில் கார்த்திக் சாப்பாடு சரியில்லை என்று வாக்குவாதம் செய்து தொழிலாளர்களுக்கு நீதி வாங்கி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Karthigai deepam serial
அதாவது, கார்த்தி செய்த விஷயத்தால் தொழிலாளர்கள் எல்லாரும் அவரை கொண்டாடி மகிழ்கின்றனர். அடுத்ததாக வேலை முடிந்து அருண் மற்றும் ஆனந்த் வீட்டிற்கு வர இன்னைக்கு எப்படி போச்சு என்று ரியா கேட்க அந்த கார்த்திக்கை நம்மளால தோற்கடிக்க முடியாது போல, எல்லாரும் அவனை கொண்டாடுறாங்க என்று சொல்கின்றனர்.
இதையும் படியுங்கள்... Kayal: அட்ராசக்க 'கயல்' சீரியலில் இவ்வளவு நாள் ரசிகர்கள் எதிர்பார்த்த விஷயம் நடக்க போகிறது! எகிற போகும் TRP!
Karthigai deepam serial Update
பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர அபிராமி அவனை வரவேற்று சாப்பிட கூப்பிடுகிறாள், ஐஸ்வர்யா அவர் தான் இந்த சொத்துஉரிமை கொண்டாட மாட்டேன்னு சொன்னாரு, அவரை டைனிங் டேபிளில் உட்கார வைத்து சாப்பாடு கொடுக்கறீங்க என்ன இதெல்லாம் என்று கேட்கிறாள்.
இதனால் கடுப்பாகும் அபிராமி ஆயிரம் தான் பிரச்சனை நடந்தாலும் அதை எல்லாம் தாண்டி அவன் என்னுடைய பிள்ளை, அவனுக்கு நான் சாப்பாடு சமைத்து கொடுப்பேன், அதை தடுக்கிற உரிமை உனக்கு மட்டுமில்ல யாருக்குமே கிடையாது என்று சொல்கிறாள்.
Karthigai deepam serial Today Episode
அடுத்து கார்த்திக்கும் சாப்பிட்டு முடித்து விட்டு ரூமுக்கு சென்று வேலை செய்த அசதியில் அசந்து தூங்க தீபா அவனுக்கு கால் அமுக்கி விடுகிறாள். இதையடுத்து மறுநாள் காலையில் கார்த்திக் ஆபிஸ் கிளம்புகிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... அட இது அதுல்ல; ஜீ தமிழ் சீரியலை பட்டி டிங்கரிங் பார்த்து எடுக்கப்படுகிறதா மல்லி சீரியல்? கலாய்க்கும் ரசிகர்கள்