ரவுடியிடம் இருந்து எஸ்கேப் ஆகும்போது விபத்தில் சிக்கிய அபிராமி- கார்த்திகை தீபம் சீரியலில் எதிர்பாரா திருப்பம்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக்கு அபிராமி இருக்கும் இடம் பற்றி தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் வைத்து ரவுடி மணியை சுற்றி வளைக்க அவன் மூலமாக கார்த்திக்கு அபிராமி இருக்கும் இடம் பற்றி தெரிய வர, இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Karthigai deepam serial
அதாவது, கார்த்திக் போலீசுடன் அபிராமியை அடைத்து வைத்திருக்கும் குடோனுக்கு கிளம்பி வருகிறான். அங்கே அபிராமி தண்ணீர் வேண்டும் என்று சொல்லி கேட்க, ரவுடி ஒருவன் கட்டை அவிழ்த்து விட்டு தண்ணீர் கொடுக்க, அபிராமி அவனை கட்டையால் அடித்து விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள். இதனையடுத்து மெய்ன் ரவுடிக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது.
இதையும் படியுங்கள்... தொலைச்சத தேடி எடுத்துட்டு வாங்க... வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா; லால் சலாம் OTT ரிலீசுக்கு வந்த சிக்கல்?
Karthigai deepam serial Update
அவனும் அபிராமியை துரத்தி வர, போலீசுடன் குடோனுக்கு வந்த கார்த்திக் அபிராமியை தேடி பார்க்கிறான். அங்கு அபிராமி இல்லாத நிலையில் அங்கு இருக்கும் தடயங்களை வைத்து இப்போ தான் தப்பி சென்றிருக்கணும் என்று முடிவெடுத்து அபிராமியை தேடுகின்றனர். மறுபக்கம் தப்பி ஓடி வரும் அபிராமி ரோட்டை அடைந்து விட, எதிர்பாராத விதமாக ஒரு வண்டி இடித்து விட விபத்தில் சிக்கி சரிந்து விழுகிறாள்.
Karthigai deepam serial Today Episode
உடனே அங்கிருந்தவர்கள் ஹாஸ்பிடலுக்கு ஏற்றி அனுப்ப, அந்த வழியாக வரும் ஆட்டோவை கை போட்டு நிறுத்துகின்றனர். அந்த ஆட்டோ ட்ரைவர் கார்த்திக் பாட வைத்த துப்புரவு பணியாளர் பெண் ராணியின் கணவர் தான். ஆனால் அவருக்கு அபிராமியை பற்றி தெரியாத காரணத்தால் ஹாஸ்பிடலில் கொண்டு வந்து அட்மிட் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Hari : ஓரு படத்துக்கு ப்ரோமோஷன் எவ்வளவு முக்கியம்? தேர்தலை மேற்கோள்காட்டி அழகாக விளக்கிய இயக்குனர் ஹரி!