சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கினார் நடிகர் சூர்யா.... வெளியான அசத்தல் அறிவிப்பு
ஐ.எஸ்.பி.எல் எனப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா சொந்தமாக விலைக்கு வாங்கி இருக்கிறார்.
ஐபிஎல், பிபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்கள் மூலம் டி20 போட்டிகள் பேமஸ் ஆனதை போல் சமீப காலமாக டி10 தொடர்களும் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு பிரபலமாகி வருகிறது. அந்த டி10 தொடர் தற்போது இந்தியாவிலும் நடத்தப்பட இருக்கிறது. ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன.
அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற இந்த ஐஎஸ்பிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் தான் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சன் வாங்கிய நிலையில், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கி இருந்தனர்.
இந்த நிலையில், ஐஎஸ்பிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியின் உரிமையாளர் யார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் குறித்த விவரத்தை மட்டும் வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்துள்ளனர்.
10 ஓவர்களை கொண்ட போட்டிகளாக இந்த ஐஎஸ்பிஎல் தொடர் நடத்தப்படும். இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க உள்ளவர்கள் தற்போதே முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஐபிஎல்-ஐ போல் இந்த ஐஎஸ்பிஎல்லும் பிரபலம் அடையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... ஷங்கர், அட்லீயை ஓவர்டேக் செய்த லோகேஷ் கனகராஜ்... டாப் 10 இயக்குனர்களின் சம்பள விவரம் இதோ