காருக்குள் வைத்து பெண் வங்கி அதிகாரி குத்திக்கொலை.. வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்கொலை.. நடந்தது என்ன?
கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் வங்கி பெண் மேலாளரை ஸ்குரு டிரைவரால் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு சக வங்கி மேலாளர் மற்றொரு வாகனத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் கோபிநாத்(37). இவர் மரக்காணத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கரூர் வைசியா வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சந்திரபிரீத்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். அதேபோல், கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் மதுரா ஓ பாட்னிஸ் (36). இவர் புதுச்சேரியில் உள்ள கரூர் வைசியா வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரத்தில் உள்ள வங்கியில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்த போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து மதுரா ஓ பாட்னிஸ் ரெட்டியார்பாளையம் கிளைக்கும், கோபிநாத் மரக்காணத்தில் புதிய கிளைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அப்படி இருந்த போதிலும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது.
இந்நிலையில் வழக்கம் போல நேற்று காலை கோபிநாத் மதுரா ஓ பாட்னிஸை அழைத்த கொண்டு காரில் சென்றார். பின்னர் மாலை பணி முடிந்து இருவரும் காரில் திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக புதுச்சேரிக்கு காரில் வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கோபிநாத் ஸ்குரு டிரைவரால் மதுராவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல நேற்று காலை கோபிநாத் மதுரா ஓ பாட்னிஸை அழைத்த கொண்டு காரில் சென்றார். பின்னர் மாலை பணி முடிந்து இருவரும் காரில் திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக புதுச்சேரிக்கு காரில் வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கோபிநாத் ஸ்குரு டிரைவரால் மதுராவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.