MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஏண்டா! எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டிய! ரவுடி மனைவியுடன் உல்லாசம்! சென்னையில் இளைஞர் ஓட ஒட விரட்டி படுகொலை!

ஏண்டா! எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டிய! ரவுடி மனைவியுடன் உல்லாசம்! சென்னையில் இளைஞர் ஓட ஒட விரட்டி படுகொலை!

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : May 21 2024, 07:54 AM IST| Updated : May 21 2024, 07:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chennai Crime News

Chennai Crime News

சென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்(26).  இவர் வாட்டர் வாஷ் கடையில் பணியாற்றி வந்தார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு புரசைவாக்கம் சண்முகராயன் தெருவில் தினேசும் அவரின் நண்பருமான ரவுடி கார்த்திக் மற்றும் ஆகாஷ் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தினேஷை சுத்துப்போட்டு சரமாரியாக வெட்டியது. 

24
Chennai Rowdy Murder

Chennai Rowdy Murder

அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த போதும் விடாமல் ஓட ஒட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது. இதில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதுதொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

இதையும் படிங்க: அரை குறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்! ஒரு நைட்டுக்கு எவ்வளவு தெரியுமா? கல்லா கட்டிய பிசினஸ்க்கு ஆப்பு!

34
Police investigation

Police investigation

அதில், சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இமான்(எ)இமானுவேல்(25) கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவலும் வெளியானது. 

44
Chennai illegal Love Murder

Chennai illegal Love Murder

இமானுவேல் மனைவியுடன்  தினேஷ் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தை அறிந்த  இமானுவேல் மனைவியுடனான தொடர்பை கைவிட சொல்லி தினேஷை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இமானுவேல் தன்னுடைய கூட்டாளிகளுடன் வந்து தினேஷை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  என் பொண்டாட்டிய அபகரிச்சதும் இல்லாம என்னையே போட பாக்குறியா? கதவை உடைத்து ரவுடி படுகொலை! வெளியான பகீர் தகவல்!

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved