காதலியை கண்டுபிடிக்க வேவு பார்க்கும் பாரதி.. ஆதி கொடுத்த ஷாக் என்ன? - இதயம் சீரியல் இன்றைய அப்டேட் இதோ!
Idhayam Serial Update தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் இதயம்.
Idhayam
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பாரதி இருசக்கர வாகனம் பஞ்சராகி நடு வழியில் நிற்க, ஆதி அவளை ஆபிஸ் அழைத்து சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hjaz9wbv1bcd91mnn1ppgrp3/hero-adhi_300x171xt.jpg)
Idhayam Tamil Serial
லதா மற்றும் பாரதி என இருவரும் ஆதி எழுதிய கவிதைகள் முழுவதையும் படித்து முடித்து விட, அதில் யார் அந்த பெண் என்ற விஷயம் தெரிய வராததால் ஆதியின் போனை பார்த்தால் உண்மை தெரிய வரும் என முடிவெடுக்கின்றனர். அதன் பிறகு ஆதியின் போனை எடுக்க அடிக்கடி ரூமுக்குள் சென்று வர ஆதி தொடர்ந்து போன் பேசி கொண்டே இருக்கிறான்.
Idhayam Today Update
இவர்களின் நடத்தையில் ஆதிக்கும் சந்தேகம் வருகிறது, ஆனால் அவன் அதை வெளிக்காட்டிகொள்ளாமல் இருக்கிறான். ஒரு கட்டத்தில் ஒரு மீட்டிங் என்று ஆதியை அழைத்து செல்ல அவன் போன் ரூமில் இருப்பதை பார்த்து லதாவும் பாரதியும் உள்ளே வருகின்றனர். ஆதியின் போனை எடுக்க அதில் பாஸ்வோர்ட் போடப்பட்டு இருப்பதால் போனை அன்லாக் செய்ய முடியாமல் போகிறது.
Zee Tamil Serial
திடீரென்று ஆதியும் திரும்பி வர இவர்கள் சோஃபா பின்னாடி ஒளிந்து கொள்கின்றனர். இதை கவனித்து விடும் ஆதி காதலியிடம் கொஞ்சி கொஞ்சி பேசுவது போல் பேசி வெறுப்பேற்றுகிறான். இறுதியாக வேண்டுமென்றே இவர்களை ரூமுக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியே கிளம்பி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.