IAS, IPS அதிகாரிகளுக்கு முதலில் வேலைக்கு சேரும் போது எவ்வளவு சம்பளம்? அதிகபட்சம் எவ்வளவு?
ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கு மாத சம்பளம் எவ்வளவு வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
எப்படியாவது ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. நிரந்தர பணி, நிலையான ஊதியம், மற்றும் சலுகைகள் என பல அம்சங்கள் அடங்கி உள்ளன. நல்ல சம்பளம், ஓய்வூக்கு பிறகு ஓய்வூதியம் கிடைக்கும் ஆகியவை தான் முக்கிய காரணங்களாகும். அரசு வேலைகளில் குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் போன்ற பதவிகளுக்கு கூடுதல் சிறப்பு உள்ளது.
நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகள் மிக உயர்ந்த பதவிகள் என்று நமக்கு தெரியும். ஆனால் இந்த பதவிகளுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..
ias officer
ஐஏஎஸ் அதிகாரிகள் முதலில் வேலைக்கு சேரும் போது அவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.56,100 வழங்கப்படும். இது தவிர TA, DA, HRA ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே இருக்கும்.
வயது, அனுபவம், தகுதிக்கு ஏற்ப அதிகாரிகளின் சம்பளம் அதிகரிக்கப்பட்டும். உதாரணமாக ஒரு அமைச்சரின் செயலாளர் பதவியில் இருக்கும் ஐஏஸ் அதிகாரியின் அடிப்படை ஊதியம் சுமார் ரூ.2,50,000 வரை இருக்கும். மேலும் ஐஏஎஸ் அதிகாரியின் பதவிக்கு ஏற்ப தர ஊதியம் ரூ.5,400 முதல் ரூ.10,000 வரை இருக்கும்.
ஐபிஎஸ் அதிகாரிகளை பொறுத்தவரை முதலில் பணிக்கு சேரும் போது அடிப்படை ஊதியம் ரூ.56,100 வழங்கப்படும். மேலும் தவிர TA, DA, HRA ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே இருக்கும். இவை எல்லாம் சேர்த்து மாதம் ரூ. 67,320 வழங்கப்படும். ஒரு ஐபிஎஸ் அதிகாரி காவல்துறை இயக்குநர் என்ற உயர் பதவியை அடையும் போது அவரின் அடிப்படை ஊதியம் சுமார் ரூ. மாதம் 2,25,000 வழங்கப்படும்.
அதே போல் ஐஆர்எஸ் அதிகாரிகளின் தொடக்க கால சம்பளம் ரூ.56,100 வழங்கப்படும். அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.2,25,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.