Year Ender 2023 : 2023 ஆம் ஆண்டில்... கோடி கோடியாய் சம்பளம் வாங்கிய டாப் 5 நடிகைகள் யார் யார் தெரியுமா?
2023 ஆம் ஆண்டில் வெளியான, படங்களில்... சம்பள விஷயத்தில் டாப் 5 இடத்தை தக்க வைத்து கொண்ட 5 முன்னணி நடிகைகள் பற்றி, இந்த தொகுப்பில் பார்ப்போம்.
அதிக சம்பளம் வாங்கும் நாயகிகள் லிஸ்டில்... கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகவே முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள தென்னிந்திய நடிகையான நயன்தாரா தான் இந்த முறையும் முதல் இடத்தை பிடித்துள்ளார். தமிழில் ஒரு படத்தில் நடிக்க, 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக வாங்கும் இவர், இந்த முறை பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி உள்ளதால் இவரது சம்பள கிராப் அதிரடியாக எகிறி உள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த 'ஜவான்' படத்திற்காக அதிகபச்சமாக 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். அதே போல் இறைவன், அன்னபூரணி ஆகிய படங்களுக்கு 11 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தமன்னா:
நயன்தாராவை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளார் நடிகை தமன்னா. திரைப்படங்களில் ஒரு பக்கம் இவர் பிசியாக இருந்தாலும், மற்றொரு புறம் லவ் மூடில், காதலருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழை விட பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா... திரைப்படங்களில் நடிக்க 5 கோடி முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெருகிறாராம். குறிப்பாக 'ஜெயிலர்' படத்தில் காவாலா பாடல் மற்றும் சில சீன்களில் வந்து போகவே, 7 கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது.
சமந்தா:
மூன்றாவது இடத்தில்... நடிகை சமந்தா உள்ளார். திருமணம் ஆகி விவாகரத்தான பிறகும் தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டுள்ள சமந்தா, மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு அதிகப்படியான படங்கள் நடிப்பதை தவிர்த்து வந்தாலும்... இந்த ஆண்டு இவர் நடிப்பில், யாசோதா, சாகுந்தலம், குஷி போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இதில், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் யசோதா மற்றும் குஷி ஆகிய படங்கள் முதலுக்கு மோசம் இல்லாமல் வசூல் செய்தது. மேலும் 2023 ஆம் ஆண்டு சமந்தா... தான் நடிக்கும் படங்களுக்கு நான்கு கோடி முதல் 6 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Trisha
த்ரிஷா:
பல வருடங்களுக்கு பின்பு... மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தின் முலம் லைம் லைட்டுக்கு வந்துள்ள நடிகை த்ரிஷா தான் 4-ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2, லியோ மற்றும் தி ரோடு ஆகிய படங்கள் வெளியானது. இதில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மாஸ் காட்டியது. அதே போல் த்ரிஷா கதையின் நாயகியாக நடித்த தி ரோடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தான் நடிக்கும் படங்களுக்கு 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார் என தெரிகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கீர்த்தி சுரேஷ்:
அதிக சம்பளம் வாங்கும் நாயகிகள் லிஸ்டில் 5-ஆவது இடத்தில் உள்ளது பிரபல இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் தான். தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருவது மட்டும் இன்றி, பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ள இவர், தான் நடிக்கும் படங்களுக்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. மற்ற நடிகைகள் அனைவருமே இவர்களை விட குறைவான தொகையை தான் சம்பளமாக பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.