Sukran Peyarchi 2022: ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த ராசிக்காரர்கள் மகிழ்ச்சி கடலில் நீந்துவார்கள்
Sukran Peyarchi 2022 Palangal: ஜூன் மாதம் 18ம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பிரவேசிக்க உள்ளார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் யாருக்கு என்னென்னெ பலன்கள் தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.
சுக்கிரன் பெயர்ச்சி 2022
சுக்கிரன் பெயர்ச்சி 2022:
ஜோதிடத்தின் பார்வையில், சுக்கிரன் கிரகம் ஆடம்பர வாழ்க்கை, பொருள், இன்பம், திருமண வாழ்க்கை, காதல், அழகு, ஆகியவற்றின் காரணியாகும். அதன்படி, ஜூன் மாதம் 18ம் தேதி சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார். ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், அந்த நபர் நிதி நெருக்கடியால் அவதிப்படுவார். அதே நேரத்தில், சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, அந்த நபர்களுக்கு செல்வம், புகழ். மரியாதை என அனைத்தும் வந்துசேரும். ரிஷப ராசியில் சுக்கிரன் நுழைவது சிலருக்கு மிகவும் சாதகமாக அமையும். சுக்கிரன் இந்த ராசி மாற்றத்தினால், சில ராசிக்காரர்கள் பண மழையில் நனைவார்கள். அவர்கள் எந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். பணம், நிதி நிலை மேம்படும். தொழிலில் லாபம் அடைவார்கள். உழைக்கும் வர்க்கத்தினருக்கும் இந்த நேரம் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். மொத்தத்தில், இந்த நேரம் உங்களுக்கு தொட்டது துலங்கும். அதே நேரத்தில், சொத்து அல்லது நிலம் போன்றவற்றால் லாபம் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராசி மாற்றம் சிறப்பாக இருக்கும். உங்களின் வருமானமும் அதிகரிக்கும், எதிர்பாராத திடீர் பண வரவு இருக்கும். இன்று உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். புதிய பயணம் செல்ல கூடும். நீங்கள் தொழில் துவங்க விரும்பினால், இது ஒரு நல்ல நேரம். வாழ்க்கைத்துணை உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார். ஆன்மீக பணிகளில் ஈடுபவடுவீர்கள்.
சிம்மம்:
ரிஷப ராசியில் சுக்கிரனின் பிரவேசம் தொழிலில் சிறப்பான பலனைத் தரும். புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வு-உயர்வு கிடைக்கலாம். இடமாற்றத்திற்கான வாய்ப்புகளும் உண்டு. வேலையில், சிறந்த பாராட்டுகளையும் பெறுவீர்கள். பணம் சாதகமாக இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் நன்றாக இருக்கும்.இந்த பயணம் அனுகூலமான பல நன்மைகளை அள்ளித் தரும்.