ஜனனி - சக்தி இடையே வெடித்த புது பிரச்சனை! ஈஸ்வரி கூறிய உண்மையால் ஜீவானந்தம் எடுக்க போகும் முடிவு என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி மரணத்திற்கு, தன்னுடைய கணவர் குணசேகரன் மற்றும் கொழுந்தன் கதிர் தான் காரணம் என்கிற உண்மையை ஜீவானந்தத்திடமே கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஈஸ்வரி.
Ethirneechal update:
எதிர்நீச்சல் சீரியல், ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய புரோமோ வெளியாகி சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
New Aadhi Gunasekaran
எதிர்நீச்சல் சீரியலில் புதிய ஆதி குணசேகரனாக என்ட்ரி கொடுத்துள்ள வேல ராமமூர்த்தின் நடிப்பு சில விமர்சனங்களுக்கு ஆளானாலும், இவருடைய என்ட்ரி எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. எனவே தான் கடந்த வாரம், இந்த சீரியல் டிஆர்பி-யில் அடித்து நொறுக்கி முதல் இடத்தை கைப்பற்றியது.
Police Arrested Gunasekaran
இதைத் தொடர்ந்து, போலீசாரால் கைது செய்யப்பட்ட குணசேகரன், மீண்டும் எங்கே போனார்கள் என்பது தெரியாமல் போகவே, இந்த சீரியலில் இருந்து குணசேகரன் கதாபாத்திரத்தை இயக்குனர் தூக்கி விட்டாரா என்கிற சந்தேகங்களும் எழுந்தது. ஆனால் குணசேகரன் இன்னும் ஏழு நாட்கள் ஜெயிலில் இருப்பார். அதற்குள் அப்பத்தாவின் கதையை முடிக்க வேண்டும் என, வக்கீல் மூலம் கதிருக்கு சேதி வருகிறது.
Eshwari Meet Jeevanandham:
இதை தொடர்ந்து, கதிர் தன்னுடைய அண்ணன் போட்ட பிளானை எக்ஸிகியூட் செய்ய நேரம் பார்த்து காத்திருக்கிறார். அப்பத்தாவை யாருக்கும், எந்த சந்தேகமும் வராமல் கோவில் திருவிழாவில் வைத்து தீர்த்து கட்டுவது குறித்து, கதிர் போனில் பேசிக்கொண்டிருக்க... அதனை ஈஸ்வரி கேட்டு விடுகிறார். எப்படியும் அப்பத்தாவை காப்பாற்ற வேண்டும் என நினைத்து, வெளியே செல்வதாக கூறி ஜீவானந்தத்தை போய் சந்திக்கிறார்.
Sakthi and Janani Fight:
இதை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், "சக்தி ஜனனியிடம் கம்பெனியை துவங்குவதற்கு முன்பே இத்தனை பிரச்சனை வருகிறது? அப்பறம் எதுக்கு இது என கேட்க? இதற்க்கு கோபமான ஜனனி அதுக்காக அப்படியே நம்ம விட்டுட முடியுமா? என பேச... இருவருக்குள்ளும் ஒரு சிறு பிரச்சனை வருகிறது.
Eshwari about truth:
அதைத் தொடர்ந்து ஜீவானந்தத்திடம் ஈஸ்வரி நீங்க கண்டிப்பா அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டுமா? என்று கேட்க, ஜீவானந்தம் நான் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்று சொல்கிறார். ஈஸ்வரி ஜீவனந்தத்தை முகம் கொண்டு பார்க்கமுடியாமல், முகத்தை திருப்பி கொண்டு ஜீவானந்தத்திடம் உங்க மனைவி கொலை செஞ்சது என்னுடைய புருஷன் குணசேகரனும், கதிரும் தான் என்று சொல்ல ஜீவானந்தம் மறுவார்த்தை பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்துள்ளார்.
Jeevanandham decision:
அதைத் தொடர்ந்து ஜீவானந்தத்திடம் ஈஸ்வரி நீங்க கண்டிப்பா அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டுமா? என்று கேட்க, ஜீவானந்தம் நான் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்று சொல்கிறார். ஈஸ்வரி ஜீவனந்தத்தை முகம் கொண்டு பார்க்கமுடியாமல், முகத்தை திருப்பி கொண்டு ஜீவானந்தத்திடம் உங்க மனைவி கொலை செஞ்சது என்னுடைய புருஷன் குணசேகரனும், கதிரும் தான் என்று சொல்ல ஜீவானந்தம் மறுவார்த்தை பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D