Tamannaah Not First Choice: 'பாகுபலி' படத்தில்.. தமன்னா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், வெளியான பாகுபலி படத்தில் தமன்னா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், 2 பாகங்களாக வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படம் 'பாகுபலி'. பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ராணா டகுபதி பல்வாள்தேவன் என்கிற கதாபாத்திரத்தில் மூர்க்கத்தனமான வில்லனாக நடித்திருந்தார்.
பாகுபலியாக நடித்திருந்த பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா (தேவசேனா) என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க, அமரேந்திர பாகுபலியாக நடித்த, பிரபாஸுக்கு ஜோடியாக தமன்னா (அவந்திகா) என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரம்யா கிருஷ்ணா, படையப்பா படத்திற்கு பின்னர் இப்படத்தில் (சிவகாமி தேவி) என்கிற வெயிட்டான ரோலை ஏற்று நடித்தார். அதே போல்... சத்யராஜ் (கட்டப்பா ) என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்.
வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜய்..! வாசலோடு திரும்பிய சோகம்... என்ன ஆச்சு?
இப்படத்தின் முதல் பாகம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கண்டது மட்டும் இன்றி, ஒட்டு மொத்த திரையுலகினரையும், தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படமாகவும் மாறியது.
இந்த படத்தில் நடிகை தமன்னா நடித்திருந்த, அவந்திகா கதாபாத்திரத்தில் ராஜமௌலி முதலில் நடிக்க வைக்க ஆசைப்பட்டது, பிரபல பாலிவுட் நடிகை ஒருவரை தான் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமான் இந்தியில் பிரபல நடிகையாக இருக்கும் சோனம் கபூரை இப்படத்தில் நடிக்க வைக்க அவருடன் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், அவர் நீண்ட நாள் கால்ஷீட் கேட்டதால்... நடிக்க மறுத்துவிட்டார். இதை தொடர்ந்தே இந்த வாய்ப்பு, தமன்னாவுக்கு சென்றது. தமன்னா எதிரிபார்த்தது போல் இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் தேடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.