அவ்வளவு பேர் மத்தியில் பெண் காவலர் மீது தாக்குதல்! திமுக பிரமுகர் ஸ்ரீதரை கைது செய்யுங்கள்! நாராயணன் திருப்பதி
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பணியிலிருந்த காவல் துறை பெண் ஆய்வாளர் காந்திமதியை கன்னத்தில் அடித்து தாக்கிய திமுக முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதரை கைது செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
Narayanan Thirupathy
இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் முன்னாள் நகர் மன்ற தலைவர் மற்றும் திமுகவின் செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீதர் என்ற நபர் கோவிலில் பணியிலிருந்த காவல் துறை பெண் ஆய்வாளர் காந்திமதியை கன்னத்தில் அடித்து தாக்கியது வன்முறை வெறியாட்டத்தின் உச்சக்கட்டம்.
DMK
ஆட்சியில் அமர்ந்தால் திமுகவினரின் அராஜகம் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கான சான்று. நூற்றுக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்த கோவிலில் இந்த தாக்குதல் நடைபெற்ற நிலையில், மூன்று நாட்களாகியும் இதுவரை அந்த நபர் கைது செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. காவல் துறையை சேர்ந்த ஆய்வாளருக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழகத்தில் திமுகவினரால் நிலவுகிறது.
tiruvannamalai
சாதாரண முகநூல் பதிவுகளுக்கே நட்ட நடு நிசியில் வீடு புகுந்து கைது செய்யும் காவல்துறை இதுவரை ஸ்ரீதரை கைது செய்யாது இருப்பது, காவல் துறையை பலவீனமாக்கும் என்பதை உணர வேண்டும். காவல் துறை தன் கண்ணியத்தை, மாண்பை, மரியாதையை தக்க வைத்து கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் இந்த விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
EV Velu
அது உண்மையெனில், திமுகவை சேர்ந்தவர் என்பதற்காக அவரை பாதுகாக்கும் முயற்சியை கைவிட்டு தமிழகத்தின் அமைச்சராக தன் கடமையை, பொறுப்பை உணர்ந்து ஸ்ரீதரை கைது செய்ய அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆவன செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.