திருமணமான இயக்குனரை உருகி.. உருகி காதலித்த பானுபிரியா! இரண்டாம் திருமணம் செய்யாதது ஏன்? உண்மையை உடைத்த பிரபலம்
மூத்த தெலுங்கு இயக்குனர் வம்சி, மற்றும் நடிகை பானுபிரியா இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில், ஏன் திருமணம் செய்துகொள்ள வில்லை என்பதை வம்சி முதல் முறையாக கூறியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் 80-பது மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுபிரியா. குறிப்பாக தமிழில் 80களில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பானுபிரியா... இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும், அறிமுகமானது தமிழ் சினிமாவில் தான். தன்னுடைய 14 வயதிலேயே... நடிப்பு மீதான ஆர்வம் காரணமாக, படங்களில் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார். அப்போது பாக்யராஜின் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பின்னர் பார்ப்பதற்கு மிகவும் இளையவரான பானுபிரியா தெரிந்ததால் அந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த படம் அவர் கையை விட்டு விலகியதே இவர் படிப்பை கைவிடவும் காரணமாக அமைந்தது. பள்ளியில் உள்ள அனைவரிடமும், நடிக்க போகும் தகவலை பானுபிரியா கூறிய நிலையில்... இப்படத்தை வைத்து மற்ற பிள்ளைகள் கிண்டல் செய்வார்கள் என்பதற்காக படிப்பை நிறுத்திவிட்டதாக தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
இதை தொடர்ந்து தன்னுடைய நடன பயிற்சியில் கவனம் செலுத்திய பானுபிரியா, 1983-ஆம் ஆண்டு 'மெல்ல பேசுங்கள்' படத்தில் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். இதை தொடர்ந்து தென்றல் தொடாத மலர்கள், சத்ரியன், புதுமனிதன், அழகன், பிரம்மா என அடுத்தது ஏராளமான தமிழ் படங்களில், விஜயகாந்த், கமல், ரஜினிகாந்த், சத்யராஜ் போன்ற பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.
தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே... ஆதர்ஷ் கவுசல் என்கிற வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரை 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன ஒரே வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தன்னுடைய ஒரு வயது மகளுடன் சென்னைக்கு வந்தார்.
பெற்றோருடன் வசித்து கொண்டே குழந்தையை ஆளாக்கிய பானுபிரியாவை... திருமணத்திற்கு முன் மூத்த இயக்குனர் வம்சியை திருமணம் செய்து கொள்ள ஆசை பட்ட நிலையில், அந்த காதல் ஏன் திருமணத்தில் முடியவில்லை என்பதை முதல் முறையாக... இயக்குனர் வம்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குனர் வம்சி இயக்கிய பல படங்களில் பானுபிரியா நடித்த போது, இருவருக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இவர்களின் காதல் கதை, அப்போது தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இயக்குனர் வம்சி ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளவர் என்பது தெரிந்து தான் பானுபிரியா காதலித்துள்ளார். இயக்குனர் வம்சியும் பானுப்பிரியாவுடன் தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டார். வம்சியுடனான காதல் குறித்து பெரியவர்களிடம் பானுபிரியா பேசிய போது... திருமணத்திற்கு அவரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. குறிப்பாக பானுப்ரியாவின் தாயார் திருமணம் செய்து வைக்க கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்துள்ளார்.
பானுபிரியாவை கட்டாயப்படுத்தி இயக்குனர் வம்சியிடம் இருந்து பிரித்ததாகவும், இதற்கு காரணம் இயக்குனர் வம்சிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தது தான் என்பதை அவரே கூறியுள்ளார் . இதன் பின்னரே அமெரிக்க தொழிலதிபருடன், பானு பிரியாவுக்கு திருமணம்ஆனது . ஆனால் அந்த திருமண வாழ்க்கையும் ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கத்திலேயே போட்டோ.. வெள்ளி பரிசுகள்.. இவ்வளவு கிஃப்டா? இந்திரஜா - கார்த்திக் செம ஹேப்பி..