Anna Serial: அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகை! இது தான் காரணமாம்?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் இருந்து, முக்கிய நடிகை ஒருவர் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Anna Serial
சன் டிவி, விஜய் டிவி தொடர்களுக்கு அடுத்த படியாக அதிக அளவிலான ரசிகர்களால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்கள் தான் பார்க்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து, கிராமத்து கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் 'அண்ணா' சீரியலுக்கு என மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
Anna Serial
இந்த தொடரில் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், போன்ற விஜய் டிவி தொடர்களில் கதாநாயகனாக கலக்கிய மிர்ச்சி செந்தில், சண்முகம் என்கிற கேரக்டரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை நித்யா ராம், பரணி என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
Anna Serial
எதிர்பாராத விதமாக மருத்துவராக இருக்கும் பரணியை, சண்முகம் திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. இதைத்தொடர்ந்து சண்முகத்தின் நல்ல மனதை புரிந்துகொண்டு பரணி அவருடன் வாழ்க்கையில் இணைகிறாரா? சண்முகம் தன் குடும்பத்திற்கும் தன்னுடைய சகோதரிகளுக்கும் வரும் பிரச்சனைகள் அனைத்தையும் தடுத்து, குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார்? என மிகவும் விறுவிறுப்பான கதைகளத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
Anna serial
கடந்த ஆண்டு மே மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல், தற்போது 200க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ஓடி வருகிறது. மேலும் இந்த தொடரை துர்கா சரவணன் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் வீரா என்கிற கதாபாத்திரத்தில் தர்சு சுந்தரம் நடித்து வந்தார். தற்போது அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரில் இவருக்கு முக்கியத்துவம் இல்லை என்பதாலும், அதிக அளவிலான காட்சிகள் இல்லை என்பதாலும், இத்தொடரை விட்டு அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. எனினும் அடுத்ததாக இவருடைய கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.