நவம்பர் 1 முதல் ஜிஎஸ்டி தொடர்பான விதிகளில் பெரிய மாற்றம்.. என்னென்ன தெரியுமா.? முழு விபரம் இதோ !!
நவம்பர் 1 முதல் ஜிஎஸ்டி தொடர்பான இந்த விதிகளில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி தொடர்பாக அரசிடம் இருந்து புதிய அப்டேட் வந்துள்ளது. நவம்பர் 1 முதல், பெரிய வணிகங்களைக் கொண்ட நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான ரசீதுகளை போர்ட்டலில் 30 நாட்களுக்குள் பதிவேற்ற வேண்டும்.
100 கோடி அல்லது அதற்கு மேல் விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும். ஜிஎஸ்டி மின் ரசீது போர்ட்டலை இயக்கும் தேசிய தகவல் மையம் (என்ஐசி), ஜிஎஸ்டி ஆணையத்தின் இந்த முடிவை ஒரு ஆலோசனையில் தெரிவித்துள்ளது. இதன்படி, ரசீது வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த காலக்கெடு ஆண்டு வருமானம் ரூ. 100 கோடி அல்லது அதற்கு மேல் உள்ள வரி செலுத்துவோருக்கு பொருந்தும். இந்த முறை நவம்பர் 1, 2023 முதல் அமலுக்கு வரும். செப்டம்பர் 1 முதல் மேரா பில், மேரா அதிகாரம் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 800 பேரை அரசாங்கம் தேர்ந்தெடுக்கும். இந்த 800 பேர் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஜிஎஸ்டி பில்களை ஆன்லைனில் பதிவேற்றுவார்கள். இந்த 800 பேருக்கும் ரூ.10,000 பரிசு வழங்கப்படும்.
அதே நேரத்தில், அத்தகைய 10 பேர் தேர்வு செய்யப்படுவார்கள், அவர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் வரை தொகையை வழங்கும். இத்திட்டத்தின் கீழ், பம்பர் பரிசாக ரூ.1 கோடி காலாண்டு அடிப்படையில் எடுக்கப்படும். இந்த வெகுமதி இரண்டு பேருக்கு வழங்கப்படும்.
BSNL : தினமும் 2 ஜிபி டேட்டா.. 150 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.397க்கு இப்படியொரு திட்டமா.!!