முத்துப்பாண்டிக்கு சிகிச்சை அளிக்க வந்த பரணி.. சண்முகத்தின் மீது எழுந்த சந்தேகம் - அண்ணா சீரியல் டுவிஸ்ட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி, வீரா, ரத்னா, கனி ஆகியோர் ஒன்று சேர்ந்து முத்துப்பாண்டி கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
முத்துப்பாண்டி கண் எரிச்சலில் தவிக்க சௌந்தரபாண்டி பரணிக்கு போன் போட்டு சிகிச்சை அளிக்க கூப்பிடுகிறார். ஆனால் பரணி அதெல்லாம் வர முடியாது என மறுப்பு தெரிவித்து போனை வைத்து விடுகிறாள். இருந்தாலும் அவளுக்கும் ஏதோ ஒரு சோகம் ஒட்டிக்கொள்ள வைகுண்டம் என்னாச்சு என்று கேட்க முத்துப்பாண்டிக்கு நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
Zee Tamil Anna Serial
அதைக் கேட்ட வைகுண்டம் ஒரு எட்டு பாத்துட்டு வந்துருவோம் மாமா என்று சொல்லி கூப்பிட இருவரும் கிளம்பி சௌந்தரபாண்டி வீட்டிற்கு வருகின்றனர். பரணி முத்துப்பாண்டிக்கு சிகிச்சை அளிக்க இசக்கி அப்பாவை பார்த்தது பேச முயற்சி செய்ய வைகுண்டம் மகளை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து பாக்கியம் பரணியை கூட்டிட்டு சென்று இவனுக்கு எதுக்கு சிகிச்சை அளிக்க வந்த எக்கேடு கெட்டவனா போறான்னு விட வேண்டியது தானே என்று கேட்க அவன் கண்ணுல மிளகாய் பொடி போட்டதே நாங்க தான் என்ற உண்மையை உடைக்க அதைக் கேட்டு பாக்கியமும் சிவபாலனும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இதையும் படியுங்கள்... அடித்து நொறுக்கப்படும் அருணின் ரிசார்ட்... கார்த்திக் மீது விழுந்த பழி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
Anna Serial Update
இசக்கி அப்பா தன்னிடம் பேசாதது பற்றி வருந்த பாக்கியம் உனக்காகத்தான் எல்லாரும் சேர்ந்து முத்துப்பாண்டி கண்ணுல மிளகாய் பொடி தூவி இருக்காங்க என்று சொல்ல இசக்கி சந்தோஷப்படுகிறாள்.
மறுநாள் காலையில் முத்துப்பாண்டி துப்பாக்கி காணும் துப்பாக்கி தொலைந்து போன என் வேலை போயிடும் என்று பதற பாண்டியம்மா உன் கண்ணில் மிளகாய் பொடி போட்டவங்கதான் எடுத்துட்டு போய் இருக்கணும் என்று சொல்ல முத்துப்பாண்டி சண்முகத்தின் மீது சந்தேகப்பட்டு அவனைப் பார்க்க கிளம்பி செல்கிறான்.
Anna Serial Today Episode
இங்கே பரணி ஹாஸ்பிடல் தயாராகி சண்முகத்தை ட்ராப் செய்ய சொல்லி கூப்பிட அவன் வர மறுக்க தங்கைகள் சண்முகத்தை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க இருவரும் வெளியே வர முத்துப்பாண்டி எதிரே வந்து நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... படத்துல தான் காமெடி பீஸ்.. ஆனா நிஜத்துல 500 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் காமெடி நடிகர் பற்றி தெரியுமா?