Anna serial : ரத்னாவுக்கு விருந்து வைத்த ஷண்முகம்; கோபத்தில் முத்துபாண்டி எடுத்த முடிவு- அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் முத்துபாண்டியை விருந்துக்கு அழைத்து வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் முத்துபாண்டியை விருந்துக்கு அழைத்து வந்து வெங்கடேஷை சிறப்பு விருந்தினர் என அறிமுகப்படுத்தி கடுப்பாக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Anna serial
அதாவது, வெங்கடேஷை பார்த்து முத்துப்பாண்டி இவன் எதுக்கு இங்க வந்தான் என்று கோபப்பட, அவரும் இந்த வீட்டு மாப்பிளை தான் என்று பதிலடி கொடுத்து உள்ளே அழைத்து செல்கிறான். முத்துப்பாண்டி கடுப்பாக இருக்க, அங்க பாரு எஸ்.பி என்று சொல்ல, அவன் பயந்து போய் சல்யூட் அடிக்கிறான். கடைசியில் அங்கு யாரும் இல்லை என்பதால் முத்துப்பாண்டி இன்னும் கோபமாகி அவன் கிடக்குறான் விளக்கெண்ண என்று முத்துப்பாண்டி திட்ட உண்மையாக எஸ்.பி வந்து ஷாக் கொடுக்கிறார்.
இதையும் படியுங்கள்... சீண்டிய மேனேஜருக்கு செம்ம நோஸ்கட் கொடுத்த கார்த்தி... கார்த்திகை தீபம் சீரியலில் தரமான சம்பவம் வெயிட்டிங்
Anna serial Update
மேலும் எஸ்.பி மச்சான் வீட்டிற்கு விருந்துக்கு வந்திருக்க, மாப்பிள்ளையா நடந்துக்கயா, அதை விட்டுட்டு இங்கேயும் போலீசா நடந்துக்கற என்று சொல்கிறார். அடுத்து விருந்து ஆரம்பிக்க ரத்னாவையும் வெங்கடேஷையும் ஒன்றாக உட்கார வைத்து ஊட்டி விட வைத்து வெறுப்பேற்றுகின்றனர். வீட்டிற்கு வந்து முத்துப்பாண்டி அந்த சண்முகத்தை சும்மா விட மாட்டேன் என்று கொதிக்க, இசக்கியும் பரணியும் தனியாக சந்தித்து நீ என் அண்ணனை மாத்து, நான் உன் அண்ணனை மாத்துறேன் என்று பேசி கொள்கின்றனர்.
Anna serial Today Episode
அடுத்து ரத்னா பரணி எல்லாரும் கோவிலுக்கு வர, பரணி என்ன விஷயம் என்று கேட்க, பால் குடம் எடுக்க போவதாக சொல்கிறாள். பால் குடம் எடுத்தா எல்லாம் நல்லதா நடக்கும்னு, என் ஸ்கூல் டீச்சர் எடுத்தாங்க என்று சொல்ல, கனி கல்யாணம் நல்லபடியாக நடக்கணும்னு பால் குடம் எடுக்க போறியா என்று கலாய்க்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Saregamapa : 12,000 பேர் பங்கேற்ற மெகா ஆடிஷன்... அதகளமாக ஆரம்பமாகிறது சரிகமப சீசன் 4 - அதுவும் இந்த தேதியிலா?