Anna Serial: அடிக்க வந்த முத்துப்பாண்டி! சண்முகத்துக்கு ஷாக் கொடுத்த பரணி - அண்ணா சீரியல் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஒருவன் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொள்ள முடிவெடுக்க முத்துப்பாண்டி அது போலீஸ் கேஸ் என்று பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Anna Serial
அதாவது, இதெல்லாம் போலீஸ் கேஸ் என்றால் எல்லா புருஷன் பொண்டாட்டியும் ஸ்டேஷனலில் தான் இருக்கணும் என்று ஷண்முகம் சொல்ல ஊர் மக்களும் ஆமாம் ஷண்முகம் சொல்றது தான் சரி, இதை பஞ்சாயத்தில் பேசி சரி செய்து கொள்ளலாம் என்று சொல்கின்றனர். இதனால் முத்துப்பாண்டி அவமானப்பட்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறுகிறான்.
Anna Serial
வீட்டில் சௌந்தரபாண்டி தனது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததை நினைத்து கவலையில் இருக்க பாக்கியத்திடம் குடிக்க சூடு தண்ணி கேட்க பாக்கியம் தண்ணீர் சூடாக இருப்பதால் ஆற்றி கொண்டிருக்க சௌந்தரபாண்டி குடு டி என்று பிடிங்கி குடிக்க வாய் வெந்து போகிறது. சூடா இருக்குனு ஆத்திட்டு தானே இருக்கேன், அவ்வளவு அவசரம் என்ன என்று திட்டி மீண்டும் ஆற்ற மீண்டும் சௌந்தரபாண்டி தண்ணீரை கேட்க சூடா இருக்கு வேணுமா என்று பாக்கியம் பதிலடி கொடுக்கிறாள்.
Anna Serial
பயங்கர கடுப்பில் வீட்டிற்கு வரும் முத்துப்பாண்டி நடந்த விஷயங்களை சொல்ல இசக்கி என் அண்ணன் கிட்ட தோக்குறதே உங்களுக்கு வேலையா போச்சு என்று நக்கல் அடிக்க முத்துப்பாண்டி அவளை அடிக்க பாயா அடி பார்க்கலாம், என் அண்ணனுக்கு தெரிஞ்சா என்னவாகும்னு யோசிச்சி பாரு என்று முத்துபாண்டிக்கு ஷாக் கொடுக்கிறாள்.
Anna serial
உடனே சௌந்தரபாண்டி உன் பொண்டாட்டிய அடக்கி வை என்று சொல்ல முத்துப்பாண்டி முதலில் நீ உன் பொண்டாட்டியை அடக்கி வை. அவங்க அடங்கி இருந்தால் இவளும் இருப்பா என்று கோபப்பட்டு அங்கிருந்து நகர்கிறான். இங்கே ஷண்முகம் ஒரு புருஷன் பொண்டாட்டிகிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொன்ன விஷயங்களை நினைத்து பார்க்க பரணி ஊருக்கு தான் உபதேசம், உனக்கு இல்லையா? நீ ஒரு நல்ல அண்ணனா, நல்ல ப்ரெசிடெண்ட்டா நடந்துக்கிற, ஆனால் நல்ல புருஷஷனா நடந்துக்கல என்று சொன்னதும் ஷண்முகம் நாளைக்கு பஞ்சாயத்துக்கு இருக்கு நான் தூங்கணும் என நழுவி கொள்கிறான்.
Anna serial
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.