திருப்பதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ்!
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது திடீரென குடும்பத்தினருடன் திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா ராமதாஸ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார். மனைவி சவுமியா ராமதாஸ், குழந்தைகள் உள்ளிட்டோரும் அன்புமணி ராமதாசுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தினருடன் இந்த திருப்பதி பயணத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திடீர் திருப்பதி விசிட்டுக்குக் காரணம் என்ன என்பதை சமூக வலைத்தளத்தில் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார். அதில் திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் தரிசனம் செய்ததாகக் கூறியுள்ளார். அன்புமணி ராமதாஸ் 0 சௌம்யா ராமதாஸ் திருமணம் 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்தது.
அன்புமணி ராமதாஸ் திருமண நாள்
பேஸ்புக்கில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், "இன்று எங்களது திருமணநாளை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தோம்.!" என்று தெரிவித்துள்ளார்.