"உண்மை கசக்கத்தான் செய்யும்.. எல்லாரும் உங்க வேலையை பாருங்க".. தினேஷ் விஷயத்தில் கடுப்பான ரச்சித்தா - ஏன்?
Rachitha Heated Insta Post : பிரபல சின்னத்திரை நடிகர் தினேஷ் அவர்களுக்கும் சின்னத்திரை நடிகை ரச்சித்தா அவர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Actress Rachitha
பெங்களூரில் பிறந்து தற்பொழுது தமிழ் சின்னத்திரை உலகில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கி வருபவர் தான் ரச்சித்தா மகாலட்சுமி. இவருக்கும் இவருடன் பணியாற்றி வந்த சக சின்னத்திரை நடிகரான தினேஷ் கோபாலசாமிக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இது இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஏழு ஆண்டு காலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்த இந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளது.
Serial Actress Rachitha
இதன் காரணமாக தற்பொழுது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், மேலும் ரச்சித்தா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த சூழலில் நான் சின்னத்திரை நடிகர் தினேஷ் கோபாலசாமி, தற்போது பரபரப்பாக நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்கேற்று, தற்போது முன்னணி போட்டியாளராக மாறியுள்ளார்.
தினேஷுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது, இந்த சூழலில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பிரபல மூத்த தமிழ் திரையுலக நடிகை விசித்ரா அவர்கள் தினேஷ் மற்றும் ரச்சித்தாவின் வாழ்க்கை குறித்து அடிக்கடி பேசி வந்தார். மேலும் சில தினங்களுக்கு முன்பு "அவரோடு யாரும் வாழ முடியாது.. அப்படி வாழ்ந்தால் ஓடித் தான் போக" வேண்டும் என்று அவர் ரச்சித்தா குறித்து கூறியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
Rachitha
உலகநாயகன் கமலஹாசன் அவர்களும் அதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த புத்தாண்டை இனிதே வரவேற்றுள்ள நடிகை ரச்சித்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார் அதில் "ஆம் உண்மை எப்போதுமே கசக்கும், அதற்காக அது உண்மை இல்லை என்று ஆகிவிடாது. இது என்னுடைய போராட்டம், நானே தனியாக போராடிக்கொள்கிறேன். எல்லோரும் உங்கள் வேலையை பார்த்தால் போதும். நாங்களும் எங்களுடைய வேலைகளை பார்க்கிறோம்" என்று கடுமையாக கூறியுள்ளார்.
இது யாரை நோக்கி அவர் கூறினார் என்பது தெரியவில்லை என்றாலும், விசித்திராவை குறி வைத்து தான் ரச்சித்தா இந்த தகவலை வெளியிட்டதாக அவருடைய ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.