அரியவகை நோய் பாதிப்பு... வலியால் துடித்தேன்; அவங்க இல்லேனா தற்கொலை செய்திருப்பேன் - பகீர் கிளப்பிய மும்தாஜ்
நடிகை மும்தாஜ், தன்னுடைய வாழ்க்கையில் தான் சந்தித்த கஷ்டங்கள் பற்றி கண்ணீருடன் பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசி இருக்கிறார்.
கோலிவுட்டில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் மும்தாஜ். டி.ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மும்தாஜ். இதன்பின்னர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த குஷி திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலுக்கு மும்தாஜ் ஆடிய கவர்ச்சி நடனம் அவரை வேறலெவலில் பிரபலமாக்கியது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் கிளாமர் வேடங்களில் நடிக்க மும்தாஜுக்கு வாய்ப்பு குவிந்தது.
ஹீரோயினாக மட்டுமின்றி ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி வந்தார் மும்தாஜ். குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்ட மும்தாஜுக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் தென்னிந்திய திரையுலகில் செம்ம பிசியான நடிகையாக வலம் வந்த மும்தாஜ், கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்த ராஜாதி ராஜா படத்தில் நடித்த பின்னர் சினிமாவை விட்டே விலகிவிட்டார்.
அதன்பின்னர் சுமார் 10 ஆண்டுகள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த மும்தாஜ், சின்னத்திரை ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கம்பேக் கொடுத்தார். அந்நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்துகொண்ட அவர், அதன்பின்னர் மீண்டும் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார். இந்த நிலையில், தான் சினிமாவை விட்டு விலகியது குறித்தும், சொந்த வாழ்க்கையில் தான் சந்திக்கும் வேதனைகள் பற்றியும் மும்தாஜ் பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டு... நள்ளிரவில் ஐஸ்கிரீம் சாப்பிட சென்ற நயன் - அதுவும் யார்கூட போயிருக்காங்க பாருங்க
அதில் அவர் கூறுகையில், உடம்பை அசைக்கவே முடியாத அளவுக்கு வலியை 2 ஆண்டுகளாக அனுபவித்து வந்தேன். பல டாக்டர்களை பார்த்தும் அது என்ன பிரச்சனை என கண்டறிய முடியவில்லை. பின்னர் ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பரிசோதனை மூலம் தான் எனக்கு ஆட்டோ இம்யூன் என்கிற அரியவகை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் உடலில் உள்ள எலும்பு ஜாயிண்ட்களில் கடுமையான வலி இருக்கும். உட்காரவோ, நிற்கவோ முடியாது. ஏன் உடலை அசைக்க கூடமுடியாத அளவு வலி இருக்கும்.
வெளியில் பார்க்கும் போது நன்றாக இருப்பது போல தெரியும், ஆனால் உள்ளே உள்ள வலி எனக்குத்தான் தெரியும். இதனால் மன அழுத்தமும் ஏற்பட்டது. அதன் காரணமாக ஏன் அழுகிறேன், எதற்காக அழுகிறேன் என்றே தெரியாமல் அழுவேன். ஒருமுறையெல்லாம் 2 மணிநேரம் விடாமல் அழுதேன், அதற்கான காரணம் இன்றுவரை எனக்கு தெரியவில்லை. என்னை அந்த மன அழுத்தத்தில் இருந்து மீட்டு வந்தது என்னுடைய அண்ணன், பேமிலி மற்றும் அல்லா தான். அவர்கள் இல்லை என்றால் நான் தற்கொலை செய்திருப்பேன்.
சிம்பிளாக ஒரு ஸ்மைல்
படங்களில் ஏன் கவர்ச்சியாக நடித்தோம் என தற்போது வருத்தப்படுகிறேன். என்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் இருந்து நீக்க ஆசைப்படுகிறேன். ஆனால் என்னால் அது முடியாது, தயவு செய்து எனது கவர்ச்சி போட்டோக்களை பரப்பாதீர்கள் என ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன். இனி எனக்கு திருமணம் ஆகும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் பார்ப்போம் என மும்தாஜ் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... முடிவுக்கு வருகிறது கோட்... இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றார் விஜய் - வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ