சில்வர் கலர் ட்ரஸ்ஸில் பளிங்கு சிலை போல் மின்னும் பாவனா... க்யூட் கிளிக்ஸ் இதோ..
நடிகை பாவனாவில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
2002-ம் ஆண்டு வெளியான நம்மல் என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பாவனா. இந்த படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் பாவனாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
தொடர்ந்து மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்த பாவனா, தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, வாழ்த்துகள், ஜெயம்கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் என்றால் அது அசல். அந்த படத்திற்கு பிறகு அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. எனினும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துக் கொண்டிருந்தார். மேலும் மலையாளம், கன்னடத்தில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு சென்ற போது கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் பிரபல நடிகர் திலீப்க்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
actress bhavana photo
இந்த சம்பவத்திற்கு பின் மலையாள திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த நிலையில் பின்னர் 2023-ம் ஆண்டு மீண்டும் மலையாள திரையுலகில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு கன்னட பட தயாரிப்பாளரான நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் பாவனா தற்போது கன்னடம் மலையாளம் படங்களில் நடித்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தி டோர் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.