ஊரே மெச்சும் படி மகள் திருமணத்தை நடத்திய நடிகர் சிவக்குமார்! சூர்யா - கார்த்தி சகோதரி பிருந்தா வெட்டிங் போட்டோ
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகள் பிரிந்தாவுக்கு கடந்த 19-பது வருடங்களுக்கு முன்பே, ஊரே மெச்சும் அளவுக்கு தடபுடலாக திருமணம் நடத்தி வைத்துள்ளார் சிவகுமார். இது குறித்த போட்டோஸ் இதோ..
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகராக அறியப்படுபவர் சிவக்குமார். தன்னுடைய 82 வயதிலும் சுறுசுறுப்பான நடை, துடிப்பான பேச்சு போன்றவற்றால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
சினிமாவில் இவரது மகன்களான சூர்யா - கார்த்தி இருவருமே முன்னணி நடிகர்களாக உள்ளதால், கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் இருந்து விலகி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படி இவர் செல்லும் நிகழ்ச்சிகளில், சிவகுமார் திடீர் என கோவமாக மாறி, செல்ஃபி எடுக்க வருபவர்களின் போனை பிடிங்கி எறிவது, பொன்னாடையை தூக்கி வீசுவது என சர்ச்சையில் சிக்குவது வழக்கம். பின்னர் அதற்கான விளக்கம் ஒன்றையும் கொடுத்த அந்த விஷயத்தில் தண்ணீர் ஊற்றி அனைத்து விடுவார்.
ஓவியம், யோகா, போன்றவற்றிலும் ஆர்வம் கொண்ட சிவகுமார், சென்னையில் இவரது மகன் சூர்யா நடித்த வரும் அகரம் அறக்கட்டளையின் பணிகளை இவர் தான் கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
சூர்யா - கார்த்தி, வாரிசு நடிகர்களாக இருந்தாலுமே கூட... இவர்கள் இருவரும் நிலையான இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களாக வளர்ந்ததற்கு முக்கிய காரணம் இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான்.
சூர்யாவை விட கார்த்தி மிக குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்தவர். இதற்க்கு முக்கிய காரணம், அறிமுக இயக்குனர்களாக இருந்தாலுமே கூட அவர்களின் கதையை நம்பி மட்டுமே இவர் படம் நடிக்க ஒப்பு கொண்டது தான்.
தமிழ் சினிமாவில் இன்று டாப் இயக்குனர்களாக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத் ஆகியோர் பேமஸ் ஆனது கார்த்தியின் படங்களை இயக்கியதன் மூலம் தான். அந்த அளவுக்கு தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் கார்த்தி.
சிவக்குமாரின் இரண்டு மகள்களும் திரையுலகில் மிகவும் பிரபலம் என்றாலும் கூட... இவரின் ஒரே மகளான பிருந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தும் அவர் பல முறை அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதற்கு காரணம் சிவக்குமார் குடும்பம் மிகவும் பாரம்பரிய குடும்பம் என்பதும் ஒன்று. தற்போது வரை பல விஷயங்களில் கிராமத்து முறையில் சிவக்குமார் தூக்கி பிடித்ததால் தான் நன்றாக பாடும் திறமை இருந்தும் அவரால் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட முடியாமல் போனது.
ஆனால் திருமண விஷேஷம் ஒன்றில், பிருந்தா பாடிய பாடல் ஒன்று வெளியாகி படு வைரலானது. அதே போல் திருமணத்திற்கு பின்னர் பொன்மகள் வந்தாள், ஜாக்பாட், ராட்சஸி, ஓ2 போன்ற படங்களில் பிருந்தா சிவக்குமார் பாடி இருக்கிறார்.
அதேபோல் பிரம்மாஸ்திரா படத்தின் தமிழ் வெர்ஷனில் ஆலியா பட்டிற்கு டப்பிங் பேசியதும் பிருந்தா தான். இதற்க்கு காரணம், பிருந்தாவின் திறமையை ஊக்குவித்த அவரின் கணவரும் சகோதரர்களும் தான்.
கிறங்க வைக்கும் லுக்.. சிவப்பு நிற ஆடையில்.. இளசுகளை சொக்க வைக்கும்.. ஐஸ்வர்யா மேனன் க்ளிக்ஸ்!
இது ஒருபுறம் இருக்க, பிருந்தா - சிவக்குமாரின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிருந்தாவுக்கு 2005-ஆம் ஆண்டு சிவக்குமார் என்கிற கிரன்ணட் தொழிலதிபருடன் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் ஜெயலலிதா, மனோரம்மா, அஜித், விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 19 வருடத்திற்கு முன்பே ஊர்... உலகமே மெச்சும் படி மகள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தினார் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.