- Home
- குற்றம்
- 28 வயது இளம்பெண் குளிப்பதை அங்குலம் அங்குலமாக வீடியோ எடுத்த 15 வயது சிறுவன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
28 வயது இளம்பெண் குளிப்பதை அங்குலம் அங்குலமாக வீடியோ எடுத்த 15 வயது சிறுவன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
இளம்பெண் குளிப்பதை 15 வயது சிறுவன் வளைத்து வளைத்து வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுவன் ஜன்னல் வழியாக செல்போனில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளான்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்து இளம்பெண் அலறி கூச்சலிட்டதை அடுத்து அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுவனிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்த போது அந்த வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து செல்போனில் அழிக்கப்பட்ட வீடியோக்கள் குறிப்பிட்ட பகுதியில் ஸ்டோரேஜ் ஆகியிருந்தது. போலீசார் அதனை கண்டுபிடித்து பார்த்தபோது அதில் இளம்பெண் குளிக்கும் வீடியோ இருந்தது. இதனையடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.