MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • கேட்ட பணத்தை கொடுக்கலனா! உல்லாசமாக இருந்ததை வெளியே சொல்லிடுவேன்! மிரட்டிய பெண்! மருத்துவ மாணவர் செய்த பகீர்.!

கேட்ட பணத்தை கொடுக்கலனா! உல்லாசமாக இருந்ததை வெளியே சொல்லிடுவேன்! மிரட்டிய பெண்! மருத்துவ மாணவர் செய்த பகீர்.!

காரை ஏற்றி பெண்ணை கொலை செய்த வழக்கில் மருத்துவ கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Jun 23 2023, 12:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள தேத்தாக்குடி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி துர்கா தேவி (38). துர்காதேவி கடந்த 18ம் தேதி இரவு வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் புஷ்பவனம் கடற்கரையில் தலையில் ரத்த காயங்களுடன் துர்காதேவியின் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

25

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துர்காதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, துர்கா தேவியுடன் புஷ்பவனம் அழகுக்கண்டர்காட்டை சேர்ந்த சுந்தரவடிவேல் மகன் அருண் (20) என்பவருடன் பேசி வந்தது தெரிந்தது. 

இதையும் படிங்க;- நண்பனின் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்..!

35

இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் அருணை பிடித்து விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அருண் வாட்ஸ் அப்பில் மளிகை பொருட்கள் விற்கும்போது கடந்த மே மாதம் துர்காதேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது துர்காதேவிக்கு அருண் செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். 

45

இந்நிலையில் சம்பவத்தன்று புஷ்பவனம் கடற்கரையில் துர்காதேவியுடன் மருத்துக்கல்லூரி மாணவர் அருண் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது துர்காதேவி, அருணிடம் ஒரு லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது துர்காதேவி, பணம் தராவிட்டால் கள்ள உறவை வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

55

இதனால் ஆத்திரமடைந்த அருண் துர்காதேவி காரை கொலை செய்துள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பாக அருண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க;- ஸ்கூலில் வைத்து டிராயரை அவிழ்த்த ஆசிரியர்.. அந்தரங்க உறுப்பில் வலி.. கதறி துடித்த மாணவன்.. நடந்தது என்ன?

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved