- Home
- குற்றம்
- ஓடும் காரில் கதற கதற இளம்பெண் பலாத்காரம்.. வேலை முடிந்ததும் கொடூரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
ஓடும் காரில் கதற கதற இளம்பெண் பலாத்காரம்.. வேலை முடிந்ததும் கொடூரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
ஓடும் காரில் இளம்பெண் கதற கதற பலாத்காரம் செய்து விட்டு சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உத்தரபிரதேச இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு லக்னோவில் உள்ள நாகாவில் வசித்து வந்தார். கடந்த செவ்வாய்கிழமை இரவு கைசர்பாக் சென்ற அவர் மீண்டும் திரும்பவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலையில் இளம்பெண் ஒருவர் ஆடைகள் கலைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் கூறுகையில்;- கைசர்பாக் பகுதியில் நின்றுக்கொண்டிருந்த போது அந்த இளம்பெண்ணை ஓடும் காரில் கடத்தி மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், வேலை முடிந்ததும் ஒடும் காரில் இருந்து அப்பெண்ணை சாலையில் தூக்கி வீசி விட்டுச் சென்றுள்ளனர். படுகாயத்துடன் அவர் ரயில் நிலையத்திற்கு பின்புறத்தில் உள்ள சாலையில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளனர். ஓடும் காரில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.