MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • 20 தூக்க மாத்திரைகள்.. துடிதுடித்த கணவர்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி விடிய விடிய!

20 தூக்க மாத்திரைகள்.. துடிதுடித்த கணவர்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி விடிய விடிய!

கள்ளக்காதலுக்காக, லட்சுமி மாதுரி என்ற பெண் தனது கணவருக்கு பிரியாணியில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். பின்னர், காதலன் கோபியுடன் சேர்ந்து தலையணையால் அமுக்கி கணவனைக் கொலை செய்தார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 24 2026, 10:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் சிலுவூரை சேர்ந்தவர் சிவ நாகராஜு (45). இவரது மனைவி லட்சுமி மாதுரி (37). இந்த தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்ளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமி மாதுரி சினிமா தியேட்டர் ஒன்றில் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை செய்து வந்தார். அப்போது கோபி என்பவருடன் லட்சுமி மாதுரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

25
Image Credit : Getty

கணவர் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கு வரழைத்து லட்சுமி மாதுரி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவனை கொலை செய்ய மனைவி திட்டமிட்டார். அதன்படி மாதுரி 20 தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி பிரியாணியில் கலந்து கணவருக்கு கொடுத்துள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிவனாகராஜு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.

Related Articles

Related image1
பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
Related image2
பேருந்தில் சில்மிஷம்..? வாலிபரின் உயிரை பறித்த வைரல் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை..? அதிரடி காட்டும் கேரளா போலீஸ்
35
Image Credit : our own

பின்னர் லட்சுமி மாதுரி காதலன் கோபியை போன் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து சிவனாகராஜுவின் முகத்தில் தலையணையை வைத்து மூச்சுத் திணறடித்து துடிதுடிக்க கொலை செய்யப்பட்டார். கணவனை கொன்ற பிறகு அந்த பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் சடலத்தின் அருகே அமர்ந்து ஆபாச படங்களைப் பார்த்தது மட்டுமல்லாமல் உல்லாசமாக இருந்துள்ளனர்.

45
Image Credit : Google

கணவர் மாரடைப்பால் இறந்ததாக கிராம மக்களை நம்ப வைத்துள்ளார். சிவனாகராஜுவின் தந்தையும் நண்பர்களும் உடலை பார்த்தபோது, காயங்களுடன் இரத்தக் கறைகளும் இருந்ததால் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து நாகராஜுவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நாகராஜு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மார்பில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்தது தெரியவந்தது.

55
Image Credit : Asianet News

இதையடுத்து போலீசார் லட்சுமி மாதுரியை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அவருடைய செல்போனை பரிசோதித்த போது கடைசியாக கோபி என்பவருடன் பேசியது தெரியவந்தது. இறுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை மனைவி லட்சுமி மாதுரி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
கணவன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
Recommended image2
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
Recommended image3
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!
Related Stories
Recommended image1
பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
Recommended image2
பேருந்தில் சில்மிஷம்..? வாலிபரின் உயிரை பறித்த வைரல் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை..? அதிரடி காட்டும் கேரளா போலீஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved