MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • சாம்பாரில் விஷம் கலந்து கொடுத்து மாமனார், மாமியார் கொலை! ஒரு வருடத்திற்கு பின் சிக்கியது எப்படி?பரபரப்பு தகவல்

சாம்பாரில் விஷம் கலந்து கொடுத்து மாமனார், மாமியார் கொலை! ஒரு வருடத்திற்கு பின் சிக்கியது எப்படி?பரபரப்பு தகவல்

விருத்தாசலம் அருகே முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்து கொடுத்து மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவனை கொலை செய்த பெண் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு கைது செய்யபப்பட்டுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : May 25 2023, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
illegal love

illegal love

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). இவரது மனைவி கொளஞ்சியம்மாள் (55). இவர்களது மகன் வேல்முருகன் (40) வெளிநாட்டில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கீதா (33). இந்த தம்பதிக்கு அகிலேஷ்வர் (12), சரவணகிருஷ்ணன் (6) என்ற மகன்கள் உள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இவருக்கு ஹரிஹரன் (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். 

34

இந்த விவகாரம் மாமியார் மற்றும் மாமனாருக்கு தெரியவந்தது. வெளிநாட்டில் இருந்த தன்னுடைய மகன் வேல்முருகனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கீதா, தங்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார், மாமனாரை முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இதில், பக்கத்து வீட்டுச் சிறுவன் நித்தீஸ்வரனும் பரிதாபமாக உயிரிழந்தார்.

44

இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மூன்று பேரும் எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்டு இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஒரு வருடத்திற்கு கொலை வழக்காக மாற்றி, கீதாவையும் அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த ஹரிஹரனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
Recommended image2
அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?
Recommended image3
இரண்டு குழந்தைகளின் தாயான 26 வயது அமிர்தா.. 32 வயது சித்தேஷ்.. 24 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved