MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது! கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை! விசாரணையில் வெளியான பகீர்.!

எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது! கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை! விசாரணையில் வெளியான பகீர்.!

விக்கிரவாண்டி அருகே நர்சிங் கல்லூரி மாணவி தரணி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கணேசன் (25) என்ற இளைஞரை 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துதுள்ளனர். 

1 Min read
vinoth kumar
Published : Mar 17 2023, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகன். இவரது மகள் தரணி(19). விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில்  தரணி தனது வீட்டில் தோட்டத்தில் இருந்த போது அங்கு மறைந்திருந்த வாலிபர் கண்ணிமைக்கு நேரத்தில் தரணியில் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பினார். 

24

மகளின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்த போது மகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியில் கதறினர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தரணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தரணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

34

இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தரணியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

44

விசாரணையில் கணேஷ் என்ற வாலிபரை தரணி காதலித்து வந்ததாகவும் அவர் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் மறைந்திருந்து தரணியை கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கணேசன் (25) என்ற இளைஞரை 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். கல்லூரி மாணவி வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு குற்றச் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
Recommended image2
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை
Recommended image3
கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved