MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • உல்லாசத்துக்கு தடையாக இருந்த உன்னுடைய புருஷனை போட்டு தள்ளிட்டேன்!மனைவியின் ரியாக்சன் எப்படி இருந்தது தெரியுமா?

உல்லாசத்துக்கு தடையாக இருந்த உன்னுடைய புருஷனை போட்டு தள்ளிட்டேன்!மனைவியின் ரியாக்சன் எப்படி இருந்தது தெரியுமா?

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலியின் கணவனை கள்ளக்காதலன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Aug 11 2023, 03:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (48). பெயிண்டர். இவரது மனைவி சமுத்திரவள்ளி (45). இவர்களுக்கு 3 மகள்கள். இவர்களின் இரண்டு மகள்கள் சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.  ஹரிணி திருவெறும்பூரில் ஐடிஐ படித்து வருகிறார். இந்நிலையில் சவுந்தரவள்ளிக்கும் லால்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

24

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவி மற்றும் கள்ளக்காதலனை கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். 

34

இந்நிலையில் நேற்று இரவு ராதாகிருஷ்ணன் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சவுந்திரவள்ளி தனது மகள்களை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்தார். அங்கு தனியாக சரவணன் மட்டும் இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்த சரவணனிடம் பேச்சுக்கொடுத்து அவரை மதுகுடிக்க வைத்துள்ளார். அப்போது சரவணன், ராதாகிருஷ்ணனிடம் தனது மனைவியுடனான கள்ளத்தொடர்வை கைவிடுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

44

இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் சரவணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். பின்னர் ராதாகிருஷ்ணன் சென்னைக்கு சென்றிருந்த கள்ளக்காதலி சவுந்தரவள்ளிக்கு போன் செய்து சரவணனை கொலை செய்துவிட்டதாக கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணணை கைது செய்துள்ளனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
29 வயது நிதினுக்காக 45 வயது சந்தியா செய்த வேலையை பார்த்தீங்களா! போலீசிடம் சிக்கியது எப்படி?
Recommended image2
கோவையில் ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! சுத்துப்போட்ட போலீஸ்! தெறித்த தோட்டாக்கள்!
Recommended image3
ஈரோடு மூதாட்டி கொ*லை வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி காரணம்! சிக்கிய நபர்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved