MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • திமுக நிர்வாகியை இதற்காக தான் கொலை செய்தோம்.! பாமக பிரமுகர் உட்பட 17 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!

திமுக நிர்வாகியை இதற்காக தான் கொலை செய்தோம்.! பாமக பிரமுகர் உட்பட 17 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!

தொழில் போட்டி காரணமாக திமுக பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறார்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

1 Min read
vinoth kumar
Published : Aug 17 2023, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்துள்ள எச்சூர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குமுதா டோமினிக். இவரது மகன் ஆல்பர்ட்(30). ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய திமுக  இளைஞரணி பொறுப்பாளராக உள்ளார். ஸ்கிராப் எடுப்பது, கட்டுமான பொருட்கள் வினியோகிப்பது, தொழிற்சாலைகளில் கழிவுகள் எடுக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 

24

இந்நிலையில், ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஒப்பந்தம் எடுத்த தனியார் ஆலையில் முன்பாக ஆல்பர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 4 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆல்பர்ட் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில், நிலை குலைந்த ஆல்பர்ட்டை முகம், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தடுக்க வந்த அவரது நண்பர்களையும் வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதில், ஆல்பர்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

34
murder

murder

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த 7-ம் தேதி இந்த கொலை வழக்கு தொடர்பாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த பிரணவ் (20), மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் (21), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தினேஷ் குமார் (21) ஆகியோர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது இந்த கொலையில் 3 சிறுவர்கள் உட்பட 21 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

44

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான எச்சூரை சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட பாமக நிர்வாகி சுரேஷ் (32), கட்டுமான நிறுவன தொழில் அதிபர் செந்தில்குமார் (48) உள்ளிட்ட 14 பேர்  கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இறுதியில் தொழில் போட்டு காரணமாக இந்த கொலை அரங்கேற்றப்பட்டது தெரியவந்தது. கூலிப்படை தலைவனாக செயல்பட்ட மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!
Recommended image2
திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!
Recommended image3
ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved