MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • யார் வீட்டுப் பொண்ண யாரு கல்யாணம் பண்றது! நடுரோட்டில் மருமகன் ஆணவக்கொலை?நடந்தது என்ன?மாமனார் பகீர் வாக்குமூலம்

யார் வீட்டுப் பொண்ண யாரு கல்யாணம் பண்றது! நடுரோட்டில் மருமகன் ஆணவக்கொலை?நடந்தது என்ன?மாமனார் பகீர் வாக்குமூலம்

மகளை காதல் திருமணம் செய்த மருமகனை பெண் வீட்டார் நடுரோட்டில் ஆட்டை வெட்டுவது போல் வெட்டி ஆணவக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Mar 22 2023, 08:41 AM IST| Updated : Mar 22 2023, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14


கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டியை அடுத்த புழுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் சரண்யா (21). இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

24

எதிர்ப்பையும் மீறி ஜெகன், சரண்யா இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதனால், சரண்யாவின் குடும்பத்தினர், ஜெகன் மீது கொலைவேறியில் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் வேலைக்காக ஜெகன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டேம் ரோடு மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் கீழே தள்ளி கால்களை இருவர் பிடித்துக்கொள்ள ஜெகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

34

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக ஜெகனின் மாமனார் சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

44

இதனையடுத்து, நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில் தனது மகளுக்கு வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்த நிலையில், தன் மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் ஜெகனை கொன்றதாக தெரிவித்தார். இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும், 2 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு குற்றச் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
காதல் கல்யாணம் பண்ண மூன்றே மாசத்துல என் பொண்ண கொன்னுட்டாங்களே! நெஞ்சில் அடித்து கதறும் தாய்
Recommended image2
கணவரை பிரிந்து வாழ்ந்த சந்தியா! வீடு புகுந்த அத்தை மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Recommended image3
35 வயது ஆன்ட்டி மீது க.காதல்..! ஆசை ஆசையாய் இரவு வீட்டிற்கு சென்ற போது நடுரோட்டில் ஹரீஷ் அலறல்..! நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved