MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • மருதமலை பட பாணியில் 4வது கள்ளக்காதலுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த 3வது கள்ளக்காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்

மருதமலை பட பாணியில் 4வது கள்ளக்காதலுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த 3வது கள்ளக்காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்

சென்னையில் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4வது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் ஆத்திரத்தில் 3வது கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
vinoth kumar
Published : Mar 29 2023, 09:00 AM IST| Updated : Mar 29 2023, 09:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சென்னையை அடுத்த காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மல்லிகா(40). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இளைய மகன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி லாரியில் கிளினராக வேலை செய்து வருகிறார். கணவர் இறந்ததை அடுத்து முருகன் என்பவரை மல்லிகா 2வதாக திருமணம் செய்துகொண்டார். 

25

இந்நிலையில், கண்ணகி நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கும் மல்லிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. முருகன் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜெயக்குமார் வந்து மல்லிகாவுடன் உல்லாசமாக இருந்து செல்வதை பழக்கமாக கொண்டுள்ளார். 

35

இந்நிலையில், மல்லிகாவை பார்க்க அவரது மகன் கடந்த 26ம் தேதி இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் மல்லிகா கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து மல்லிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

45

 பின்னர், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டதை அடுத்து கண்ணி நகரை சேர்ந்த ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல் வெளியானது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில்;- மல்லிகாவின் முதல் கணவர் இறந்ததை அடுத்து 2வதாக முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்த போதும் கண்ணகி நகரை சேர்ந்த ஜெயக்குமாருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இவருக்கு தெரியாமலே பாண்டியன் என்பவருடன் மல்லிகா தொடர்பில் இருந்துள்ளார். 

55

சம்பவத்தன்று இரவு மல்லிகா வீட்டுக்கு ஜெயக்குமார் சென்ற போது அங்கு பாண்டியன் உடன் மல்லிகா உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால், ஆத்திரத்தில் இருந்த ஜெயக்குமார் பாண்டியன் வெளியே சென்றதும் மல்லிகா வீட்டிற்கு மது பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.  இதையடுத்து, ஜெயக்குமாரை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved