MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • சிறுமியிடம் சில்மிஷம் செய்துவிட்டு எஸ்கேப்.. போலீசிக்கு தண்ணீ காட்டி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்.. 5 மாதங்களில் தீர்ப்பு

சிறுமியிடம் சில்மிஷம் செய்துவிட்டு எஸ்கேப்.. போலீசிக்கு தண்ணீ காட்டி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்.. 5 மாதங்களில் தீர்ப்பு

ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2 Min read
vinoth kumar
Published : Dec 26 2025, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாலியல் வன்கொடுமை
Image Credit : Getty

பாலியல் வன்கொடுமை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி பள்ளி முடிந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த 4ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமியை பின்தொடர்ந்து வந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினார். இந்த சம்பவம் அப்போது தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

24
குற்றவாளியை கைது செய்த போலீஸ்
Image Credit : Asianet News

குற்றவாளியை கைது செய்த போலீஸ்

இந்த சம்பவம் தொடர்பாக 9 தனிப்படைகள் அமைத்து திருவள்ளூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை ஈடுபட்டனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 13 நாட்களுக்கு பிறகு அதாவது ஜூலை 25ம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா (35) என்பது தெரியவந்தது. இதனிடையே கைது செய்யப்பட்டவரின் புகைப்படத்தை சிறுமியிடம் காட்டி குற்றவாளியை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

Related Articles

Related image1
ஜனவரி 3ம் தேதி பள்ளி, கல்லூரி அரசு அலுவலங்களுக்கு விடுமுறை..! எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம் தெரியுமா?
Related image2
எமன் ரூபத்தில் வந்த கார்.! கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்ட பாதயாத்திரை சென்ற பக்தர்கள்.! 3 பெண்கள் ஸ்பாட் அவுட்!
34
 போக்சோ உள்ளிட்ட 10 பிரிவின் கீழ் வழக்கு
Image Credit : Asianet News

போக்சோ உள்ளிட்ட 10 பிரிவின் கீழ் வழக்கு

இதனையடுத்து போக்சோ உள்ளிட்ட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு கடந்த 5 மாதங்களாக திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் 22 முறை அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், குற்றவாளி பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும்,1.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை வழங்கிடவும் உத்தரவிட்டார். சாகும் வரை தண்டனையை அனுபவிக்கவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பிஸ்வகர்மா புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 5 மாதத்திற்குள் நீதிமன்றம் விசாரணை முடித்து தீர்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

44
நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Image Credit : Asianet News

நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில்,: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் நாள் நான்காம் வகுப்பு பயிலும் 8 வயது மாணவி கொடிய முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ. 2 லட்சம் தண்டமும் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. குற்றவாளி தண்டிக்கப்படுவதற்கு பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நீதிமன்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
Recommended image2
நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!
Recommended image3
ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!
Related Stories
Recommended image1
ஜனவரி 3ம் தேதி பள்ளி, கல்லூரி அரசு அலுவலங்களுக்கு விடுமுறை..! எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம் தெரியுமா?
Recommended image2
எமன் ரூபத்தில் வந்த கார்.! கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்ட பாதயாத்திரை சென்ற பக்தர்கள்.! 3 பெண்கள் ஸ்பாட் அவுட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved