- Home
- Cinema
- கைது செய்யப்படும் மாயா - கார்த்திக்கு எதிராக போடப்படும் பிளான் என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
கைது செய்யப்படும் மாயா - கார்த்திக்கு எதிராக போடப்படும் பிளான் என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Karthigai Deepam 2 Update: கார்த்திகை தீபம் 2 சீரியலில், ஒரு வழியாக கார்த்திக் காதலை வெளிப்படுத்திய நிலையில், என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

நல்ல படியாக நடந்த ஆபரேஷன்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'கார்த்திகை தீபம் 2'. திங்கள் முதல் சனி கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், கடந்த சனிக்கிழமை அன்று ரேவதிக்கு ஆப்பரேஷன் நடக்க தொடங்கிய நிலையில் இன்று ரேவதிக்கு ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிகிறது. இதைத் தொடர்ந்து டாக்டர் ரேவதிக்கு இனி எந்த ஆபத்தும் கிடையாது என மகிழ்ச்சியான தகவலை கூறினாலும், இன்னும் அவர் கண் விழிக்கவில்லை என கூறுவதால் அனைவரும் மீண்டும் பதற்றம் அடைகிறார்கள்.
காதலை வெளிப்படுத்தும் கார்த்திக்:
பிறகு கார்த்திக் ரேவதி பக்கத்தில் அமர்ந்து எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ரேவதி என்று சொல்ல ரேவதி சந்தோஷத்தில் கண் திறக்கிறாள். என்னுடைய சவாலில் நான் ஜெயித்து விட்டேன் என்று சொல்கிறாள். மறுபக்கம் மாயா வீட்டுக்கு வர காளியம்மா அந்த ரேவதி இன்னும் சாகல உயிரோட தான் இருக்கா என்று சொல்ல மாயா நான் என்னென்னமோ திட்டம் போட்டேன் ஆனா கார்த்தி எல்லாத்தையும் தவிடு பொடியாக்கிட்டான் என புலம்புகிறார்.
'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா சொன்ன குட் நியூஸ்! குவியும் வாழ்த்து!
கைது செய்யப்படும் மாயா:
பிறகு சிவனாண்டி முத்துவேல் ஆகியோர் கொஞ்ச நாளைக்கு கார்த்திக் கிட்ட உஷாரா தான் இருக்கணும். நம்ம மேல கொல காண்டில் இருப்பான் என்று பேசிக்கொள்கிறார்கள். பிறகு அங்கு வந்த கார்த்திக் இருவரையும் அடி வெளுத்தெடுத்து அவர்களை வைத்து மாயாவை அங்கு வர வரவைக்க பிளான் போட்ட நிலையில், மாயாவை போலீசாரும் கைது செய்கிறார்கள்.
இன்பன் உதயநிதி வெளியிடும் முதல் படத்துக்கே இந்த நிலைமையா? முன்பதிவில் காத்துவாங்கும் இட்லி கடை..!
கார்த்திக்கு எதிராக நடக்கும் சதி:
பிறகு காளியம்மா சிவனாண்டி மற்றும் அங்கிருந்த ஆட்களை எல்லாம் பார்த்து நீங்கள் எல்லாம் ஒரு ஆம்பளையா என்று அசிங்கப்படுத்துகிறாள். அடுத்ததாக சாமுண்டீஸ்வரியை கார்த்திக்கு எதிராக மாற்ற வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது பற்றி வரும் எபிசோடுகள் மூலம் தெரிந்து கொள்வோம்.