அஜித் - விஜய் பற்றி நச்சுனு ஒரு வார்த்தை..! ரசிகர்களின் கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்த யுவன்..!
கொரோனா தொற்று காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு ஓய்வு, மிகவும் பிஸியாக பணியாற்றி வந்த பிரபலங்கள் பலரை வீட்டிற்குள்ளேயே முடங்க வைத்துள்ளது. இந்நிலையில், பிரபலங்கள் பலர், இந்த நாட்களில் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்வது மட்டும் இன்றி, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கழித்து வருகிறார்கள்.
அந்த வகையில், இந்த காலத்து இளசுகளின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் ஜாலி சாட் செய்துள்ளார். இதில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மிகவும் சுவாரஸ்யமாக பதிலும் அளித்துள்ளதுள்ளார்.
இந்த ஊரடங்கு ஓய்வு எப்படி செல்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த யுவன், வீட்டை சுத்தம் செய்வது, மனைவிக்கு உதவியாக சமையல் செய்வது மற்றும் தன்னுடைய மகள் ஜியா உடன் விளையாடுவது என மிகவும் மகிழ்சியாக கழிகிறது என கூறியுள்ளார்.
ஊரடங்கு ஓய்வில் தன்னுடைய தந்தை, இளையராஜாவின் பாடல்களை கேட்பதாக தெரிவித்துள்ளார் யுவன்.
பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் அதிகம் விளையாடிய விளையாட்டு எது என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பேட்மிட்டன் என தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய உணவு வகைகளில் தனக்கு மிகவும் பிடித்தது மீன் என்று கூறியுள்ளார்.
சென்னையில் நீங்கள் அதிகம் செல்லும் இடம் எது என ரசிகர் கேட்டதற்கு கடற்கரை என தெரிவித்துள்ளார்.
அஜித் பற்றியும் விஜய் பற்றியும் ஒரு வார்த்தையில் சொன்னால் எப்படி சொல்வீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அஜித்தை 'நம்ம தல' என்றும், விஜய் தன்னை கவர்ந்த மனிதர்' என்று பதிலதித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் தன்னை கவர்ந்த பாடல் என்மேல் விழுந்த மழைத்துளியே பாடல் என கூறி, ரசிகர்களுக்கு சில வரிகளை அந்த பாடலை பாடியும் காட்டியுள்ளார்.
அனிருத் இசையில் பிடித்த பாடல் எது என கேட்கப்பட்ட கேள்விக்கு, தனியாக தவிக்கின்றேன் பாடல் என என தெரிவித்துள்ளார்.
அஜித்தின் வலிமை பட அப்டேட் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த யுவன், இந்த படத்தில் இசை தீபோல் வந்துள்ளதாகவும், ஊரடங்கு காரணமாக பணி சற்று பொறுமையாக நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் இசையமைப்பாளர்களில் தன்னை கவர்ந்தவர் ஜான் வில்லம்ஸ் என தெரிவித்துள்ளார் யுவன்.
மேலும், ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை, மன அழுத்தத்தை போக்க ஒரு நாளைக்கு 5 முறை தொழுகை, திரைப்படம் தயாரிப்பது என ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார் யுவன்.