'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் நான் இல்லை..! கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த இளம் நடிகை..!
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கடைசி நேரத்தில் பிக்பாஸ் பட்டியலில் இடம் பிடித்த பிரபல இளம் நடிகை ஒருவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், பல பிரபலங்கள் காமெடி நடிகர்கள் சின்னத்திரை பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்கள் என பலர் போட்டி போட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள்.
உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன், நாளை (அக்டோபர் 4 ஆம் தேதி) தொடங்க உள்ளது. இதற்காக அடுத்தடுத்த புரோமோ வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில், போட்டியாளர்கள் யார் என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்பதற்காக அனு மோகன், ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத் காலிக், ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா சார்ல்டன், சனம் ஷெட்டி ஆகியோர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் இளம் நடிகை காயத்ரியின் பெயரும் இடம்பெற்றது. சரியான படவாய்ப்புகள் அமையாமல் இருக்கும் காயத்ரி இதன் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை பெரிதாக அறியப்படாத நடிகையாகவே இருக்கிறார் காயத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை. என பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.