கொரோனாவால் தள்ளிப்போன ஆடம்பர திருமணம்... அடுத்த மாதம் காதலியை கரம்பிடிக்க போகும் பிரபல நடிகர்...!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிதின் அடுத்த மாதம் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் ஹீரோவாக வலம் வருபவர் நிதின். இவர் டோலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான சுதாகர் ரெட்டியின் மகன்.
சமீபத்தில் வெங்கு குடுமுலா இயக்கத்தில் நிதின் நடித்த பீஷ்மா என்ற காமெடி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.
தொடர் வெற்றிகளை ருசித்து வந்த நிதின் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஷாலினி என்பவரை கரம் பிடிக்க முடிவு செய்தார். இவர்களது நிச்சயதார்த்தம் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதையடுத்து ஏப்ரல் 15 மற்றும் 16 தேதிகளில் துபாயில் பிரம்மாண்டமாக நடைபெறவிருந்தது.
இந்நிலையில் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸில் இருந்து இந்திய மக்களை பாதுகாப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
இதனால் நிதின் தனது திருமண திட்டத்தை ரத்து செய்ததோடு மட்டுமல்லாது, துபாயில் தடபுடலாக நடக்கவிருந்த திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் நிறுத்திவிட்டார்.
மேலும் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் சிம்பிளாக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது.
கொரோனாவின் தீவிரம் சற்றும் குறையாத நிலையில் வரும் ஜூலை மாதம் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் காதலியை கரம் பிடிக்க உள்ளாராம் நிதின்.