அந்த இடத்தில் அசத்தல் டாட்டூ... கறுப்பு புடவையில் ரகசியத்தை கசியவிட்ட யாஷிகா ஆனந்த்...!
கறுப்பு புடவையில் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோவின் மூலம் அம்பலமான அழகு டாட்டூ ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
முதல் படத்திலேயே, கவர்ச்சிகரமான வேடத்தில்
அதுவும் அடல்ட் படத்தில் நடித்து, இளசுகளை சுண்டி
இழுத்தவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து" பட
நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து,
'நோட்டா', 'ஜாம்பி' போன்ற படங்களில் நடித்தாலும்,
முதல் படத்தில் கிடைத்த அளவிற்கு இவருக்கு
வரவேற்பு கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து, பிரபலங்கள், மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியான கேரக்டர் கிடைக்கவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார்.
பட வாய்ப்புக்காக நாளுக்கு நாள் உடை அளவை சிறிதாக்கி புடவையில் ஆரம்பித்து குட்டை டவுசர் வரை சகல உடைகளில் போட்டோ ஷூட் நடத்திவிட்டார். ஆனால் பட வாய்ப்பு கிடைத்ததாக தெரியவில்லை.
தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சைடு கேப்பில் மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வரும் யாஷிகா, அங்கு ஷூட் செய்யப்படும் ஹாட் கிளிக்ஸ்களை இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
அப்படி யாஷிகா ஆனந்த் சமீபத்தில் மெல்லிய கறுப்பு நிற புடவையில் கதிகலங்க வைக்கும் படியான போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
புடவைக்கு பெல்ட் அணிந்து பொருந்தாமல் போஸ் கொடுத்திருக்கும் யாஷிகாவின் இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது. காரணம் இடையை பார்க்கும் ரசிகர்கள் விக்கி போய் நிற்கும் அளவிற்கு, இடையில் அப்படியொரு அம்சமான டாட்டூ பளிச்சென தெரிகிறது.