MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருவாரா ரக்ஷிதாவின் கணவர்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருவாரா ரக்ஷிதாவின் கணவர்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஷிதா கலந்து கொண்ட நாள் முதலே அவருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து வரும் அவருடைய கணவர் தினேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் ஃபிரீஸ் டாஸ்க் மூலம் செல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 28 2022, 01:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிக்பாஸ் 6 ஆவது சீசன் தற்போது 80-வது நாளை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்ற பெரும்பாளான போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், 10 போட்டியாளர்கள் இன்னும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி. ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய ஸ்டைலில் ஆடி வரும் ரச்சிதாவுக்கு நிறைய ரசிகர்களும் உள்ளனர். பொதுவாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மத்தியில், தன்னை நோக்கி வந்த ராபர்ட் என்கிற பிரச்னையை சாமர்த்தியமாக ஓவர் டேக் செய்து அசத்தலாக விளையானார்.
 

25

ரச்சிதா தன்னுடைய கனவுகள் குறித்து பிக்பாஸ் தொடக்கவிழாவிலேயே பேசி இருந்த நிலையில், தற்போது அவருடைய குடும்ப பின்னணி பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அதில் அவர், தனக்கு படிப்பு பெரிதாக வரவில்லை என்றும், தான் கூட்டு குடும்பத்தில் இருந்ததால் தன் பெற்றோருக்கு நிறைய நெருக்கடி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். அப்போது ஒருமுறை, தான் நன்றாக படிக்காததால் தன்னை தன் பெற்றோர் பல முறை அடித்துள்ளதாகவும், கழுத்தை நெரித்து நீ செத்துவிடு என சொல்லி மிரட்டியதாகவும் கூறியுள்ளார். 


 

35

ஆனால் இன்று தன்னுடைய நிலையை பார்த்து எல்லோரும் பெருமை படுவதாகவும், தன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தான் உயிர் இருக்கும் வரை அம்மாவை சிறந்த முறையில் பார்த்துக் கொள்வேன் என அவர் பேசியதை கேட்டு பிக்பாஸ் வீட்டில் அனைவரும் உருகி விட்டனர்.

45
Bb tamil 6

Bb tamil 6

இதேபோல் தனக்கு குழந்தை பேறு இல்லாதது குறித்தும் ரச்சிதா உருகியுள்ளார். இதற்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடக்குமென்று எனக்கு சத்தியமாக தெரியாது. குழந்தை அமைப்பு இருக்கின்றதா என்றும் எனக்கு தெரியாது. என் அம்மா தான் எனக்கு குழந்தை. அந்த கடவுள் அந்த குழந்தையை என்னோடு கடைசி வரைக்கும் கொடுக்க வேண்டும். அந்த குழந்தையை நல்லபடியா நான் பார்த்துகொள்ள வேண்டும். அதை மட்டும்தான் நான் கேட்கிறேன். என் திறமைக்கு ஆதரவாக இருந்தபோது, என் அருகிலேயே இருந்தபோதும் அவரது அருமை தெரியவில்லை. இங்கு நான் நிற்பதற்கு முழு முதல் காரணம் என் அம்மாதான். என்னோட வாழ்க்கைனா அவர் மட்டும்தான். அவருடைய அருமை தெரிய ஆரம்பிக்கும்போதுதான் பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. இதற்கு பிறகு எனக்கு நீ, உனக்கு நான் என்று வாழ விரும்புகிறேன் என கண்ணீர் விட்டு ரச்சிதா உருகி இருந்தார்.
 

55

ஆனால் இதுவரை ரக்ஷிதா பிக்பாஸ் வீட்டிற்குள் தன்னுடைய கணவர் குறித்து பெரிதாக பேசிக்கொண்டது இல்லை. ஆனால் அவருடைய கணவர் தங்கள் இருவருக்கும் இடையே சிறிய பிரச்சனை தான்... கண்டிப்பாக அது சரியாகிவிடும் என பேசி இருந்தார். இவருடைய பேச்சில் இருந்து மீண்டும் ரக்ஷிதாவுடன் வாழ ஆசைப்படுவது தெரிந்தது. மேலும் ரக்ஷிதாவுக்கு வெளியில் இருந்து சப்போர்ட் செய்து யாரும் இவர், தற்போது நடந்து வரும் ஃபிரீஸ் டாக்ஸ் மூலம் ரக்ஷிதாவின் அம்மாவுடன் சேர்ந்து வீட்டிற்குள் செல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருவேளை அப்படியே உள்ளே வந்தால் இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிவாஜிக்கு ஒரு குரல்.. எம்.ஜி.ஆருக்கு ஒரு குரல்! நடிகர்களுக்காகவே குரலை மாற்றிய டி.எம்.எஸ் - வியக்க வைக்கும் ரகசியம்!
Recommended image2
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டூ நேஷனல் அவார்டு வின்னர்! அஜித்திற்கும் பிரபுதேவாவிற்கும் குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!
Recommended image3
வாழ்க்கையா? பணமா? காதல் கோட்டை படத்திற்காக அஜித் செய்த அந்தப் பெரிய தியாகம்.. இன்று வரை யாருக்கும் தெரியாத உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved