சுஷாந்த் தற்கொலையின் பின்னணி என்ன..? அவரின் ஆவியை அழைத்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்!
சுஷாந்த் அவியிடம் பேசி அவரின் தற்கொலையின் பின்னணியை கேட்ட ரசிகரால் பரபரப்பு.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14 ஆம் தேதி அன்று மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதான நடிகர் சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதுவே அவருடைய தற்கொலைக்கு காரணம் என்றும் கூறப்படட்டது.
சுஷாந்த் இறந்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் இதுவரை இவரின் நினைவு ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கவில்லை. சுஷாந்த் தற்கொலை குறித்து மும்பை காவல்துறையினர். ஏற்கனவே அவரது சமையல்காரர் முதல் பராமரிப்பாளர் மற்றும் மேலாளர்கள். அவரது காதலி ரியா சக்ரவர்த்தி, நண்பர் மகேஷ் ஷெட்டி, இயக்குனர் முகேஷ் சாப்ரா, பிஆர் முகவர் ரோஹினி ஐயர், இயக்குனர் ஷானூ ஷர்மா, என பலரை விசாரித்துவிட்டனர்.
சுஷாந்தின் ரசிகர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்கள், வாரிசு நடிகர்கள் வளர வேண்டும் என்பதற்காக, வெளிப்புற திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து வரும் நடிகர்கள் புறக்கணிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இப்படி பல்வேறு பிரச்சனைகளால், ஏற்கனவே மன அழுத்தத்தால் அவதி பட்டு வந்த இவர், மேலும் மனச்சோர்வுக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது ரசிகர்கள் இது ஒரு “திட்டமிட்ட கொலை” என்று கருதுகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு, ஒரு வீடியோ வைரலாகி, அதில் ஒரு ரசிகர் சுஷாந்த் தற்கொலைக்கு பின்னால் உள்ள மர்மத்தை தெரிந்து கொள்ள போகிறேன் என்று கூறி, சுஷாந்தின் ஆவியுடன் தொடர்பு கொண்டதாகக் கூறினார்.
இதில் அந்த ரசிகர் சில கேள்விகளைக் கேட்கிறார், அதற்கு சுஷாந்த் மற்றும் பிற ஆவிகள் பதிலளிக்கும். அதில் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டாதாகவே அந்த நபர் கூறுகிறார்.
இவரில் செயல் பரபரப்பை ஏற்படுத்திய போதும், இதனை பெரிதாக யாரும் கண்டுகொள்ள வில்லை. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.