இந்த வாரம் வெளியேற போவது யார்? பிரபலத்தின் கணிப்பு நிஜமாகுமா..!
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. எனவே யார் பிக்பாஸ் வின்னர் ஆவர் என்பதை விட, அடுத்ததடுத்த வாரங்களில் யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
இந்த வாரம் இரண்டு பேர் வெளியாகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் உறுதியாகாத நிலையில், பலரும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஓட்டு போட்டு சேவ் செய்து வருவதில் ஆர்வமாக உள்ளனர்.
அதே போல் இதுவரை தங்களது எந்த திறமையும் வெளிக்காட்டாமல் இருக்கும், கேப்ரில்லா, ஆஜித், ஷிவானி, சோம் ஆகியவர்களை ஊக்குவிக்கும் விதமாக தற்போது நடந்து வரும் பிரீஸ் டாஸ்க் மூலம் வீட்டுக்குள் வர உள்ள அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஊக்குவித்து செல்கிறார்கள்.
எனவே இனி இவர்கள் இருக்க போகும் சில நாட்களிலாவது இந்த விளையாட்டை புரிந்து நல்ல விதமாக விளையாடுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் யார் வெளியேற வாய்ப்புள்ளது என்பதையும், யார் காப்பாற்றப்படுவார் என்பதையும் கணித்துள்ளார்.
அதில், ஷிவானி மற்றும் சோம் காப்பாற்றப்படுவார்கள் என்றும்... ரம்யா இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவரது கணிப்பு பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.