“சுப்ரமணியபுரம்” படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருந்தது இவர் தானாம்... உதறிவிட்ட வாய்ப்பை எண்ணி கதறி அழுத நடிகை..!
தமிழ் சினிமாவின் கதைக்களத்தையே மாற்றி அமைத்த திரைப்படம் சுப்ரமணியபுரம். இதில் ஹீரோயினாக நடிக்க ஸ்வாதிக்கு பதிலாக இயக்குநர் சசிக்குமார் முதலில் அணுகியது ஒரு பிரபல நடிகையை, அவர் யார் என்பது குறித்து வாங்க பார்க்கலாம்...
தமிழ் சினிமாவின் பயணத்தை சில படங்கள் வேறு விதமாக மாற்றிவிடுவது உண்டு. சூப்பர் ஸ்டார்களை வைத்து கோடிக்கணக்கான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் பிளாப் ஆவதும் உண்டு, புதுமுகங்களை கொண்டு எடுக்கப்பட்ட படம் கதைக்காக சூப்பர் ஹிட்டடித்த சம்பவங்களும் கோலிவுட்டில் உண்டு.
அப்படி தமிழ் ரசிகர்கள் தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடிய திரைப்படம் “சுப்ரமணியபுரம்”. இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இயக்கிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த கால கேங்கஸ்டர் கதையம்சத்துடன் வெளியான இந்த திரைப்படம் பட்டி தொட்டி எல்லாம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் நடித்த ஜெய், ஸ்வாதி இருவருக்குமே மிகப்பெரிய கேரியர் பிரேக்காக அமைந்தது.
சுப்ரமணியபுரத்தில் முதலில் ஜெய் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நான் தான், நல்ல வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன் என சாந்தனு பாக்யராஜ் பல இடங்களில் வருத்தப்பட்டிருக்கிறார்.
அதேபோல் ஸ்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்ததை எண்ணி பிரபல நடிகை ஒருவரும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கண்ணீர் விட்டு கதறியுள்ளாராம்.
அந்த நடிகை வேறு யாரும் அல்ல, நம்ம காதல் படத்தில் நடித்த சந்தியா தான். இந்த படத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என மிகவும் கஷ்டப்பட்டு, தேடிபிடித்து சந்தியாவிடம் சசிக்குமார் கதை சொல்லியுள்ளார். ஆனால் அவர் அப்போது அதில் நடிக்க மறுத்துவிட்டார்.
ஆனால் சுப்ரமணியபுரம் படம் வெளியான பிறகு அதில் ஸ்வாதியின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தது.இப்படிப்பட்ட படத்தை மிஸ் பண்ணிட்டோமே என சந்தியா வறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சுப்ரமணியபுரத்தில் மட்டும் நடித்திருந்தால் அவருக்கு அது செகன்ட் இன்னிங்ஸாக அமைந்திருக்கும், இப்படி கல்யாணம் குடும்பம் என செட்டில் ஆன பிறகு சீரியலில் நடிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.