தற்கொலை முன் முதல் முறையாக சித்ரா சொன்ன விஷயம்..? நடிகை சரண்யா பரபரப்பு பேட்டி..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஆயுத எழுத்து' ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை சரண்யா, கடைசியாக ஷூட்டிங்கில் சித்ரா எந்த மனநிலையில் இருந்தார் என்பதையும், தன்னிடம் கூறிய விஷயத்தையும் பிரபல தனியார் நியூஸ் தொலைக்காட்சியின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் நடிகை சித்ரா நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இவரது தற்கொலை தொடர்பாக, அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களுக்கு சம்மன் அளித்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சித்ராவின் நண்பர்கள் தொடர்ந்து தங்களுக்கு தெரிந்த உண்மைகளை வெளியிட்டு வரும் நிலையில், சித்ராவின் தோழியும், சீரியல் நடிகையுமான சரண்யா பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இதில் அவர் கூறியுள்ளதாவது... "கடந்த இரண்டு வருடமாகவே தன்னிடம் அவரது வேலை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வார். தற்கொலைக்கு முன் அவர் கடைசியாக கலந்து கொண்ட ஷூட்டிங்கில் பேசிய போது தான் சித்ராவிற்கும் - ஹேமந்த்திற்கும் பதிவு திருமணம் நடந்தது தனக்கே தெரியவந்தது.
பொதுவாகவே அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேச கூடிய ஒரு நபர் தான் அவர். ஆனால் இந்த காதல் விஷயத்தை பற்றி மட்டும் அவர் பெரிதாக யாரிடமும் ஓப்பனாக பேசவில்லை. அதே போல் கடைசியாக நான் ஷூட்டிங்கில் பார்த்த போது, பழைய சித்ராவை என்னால் பார்க்க முடியவில்லை. எப்போதும் போனில் பேசி கொண்டே இருந்தார். டென்ஷனாக இருந்தார். அவரது அசிஸ்டன்டிடம் கூட ஏதோ பேப்பர் எடுத்துக்கொண்டு வா, சைன் போட வேண்டும் என கூறி கொண்டே இருந்ததாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய சரண்யா, தனக்கு நெருங்கியவர் என்று நினைக்கும் போதே... முதலில் வாயில் வருவது இது தற்கொலையாக இருக்காது என்பது தான். சித்ராவும் தற்கொலை முடிவை எடுக்கும் ஒரு நபர் இல்லை. எனவே இது கண்டிப்பாக தற்கொலையாக இருக்கும் என தனக்கு தோன்றவில்லை என்றும், இதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் இறுக்கமான குரலுடன் கண்கலங்கியபடி கூறியுள்ளார்.
தொடர்ந்து சித்ராவின் தோழிகள், அவர் தற்கொலை முடிவை எடுப்பவர் இல்லை என கூறிவருவதால்... இது உண்மையில் தற்கொலையா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.