கதறி அழுத ‘வடிவேல்’ பாலாஜி மகள்... இதயத்தை சுக்கு நூறாக வெடிக்க வைக்கும் காட்சிகள்...!
உடல் நலக்குறைவால் உயிரிழந்த வடிவேல் பாலாஜியின் மகள் அவருடைய எழுப்ப முயன்று கதறி அழும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது.
விஜய் தொலைக்காட்சி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற காமெடி நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மூலம் அறிமுகமானவர் வடிவேல் பாலாஜி.
அச்சு அசலாக கெட்டப்பில் மட்டுமல்லாது, மாடுலேஷன், டைலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் என அப்படியே வடிவேலுவை கண்முன் காட்டியவர். ரசிகர்களை வயிறு குலுக்க சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி இன்று அனைவரையும் கதறி அழ வைத்துள்ளார்.
15 நாட்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய கை, கால்கள் செயலிழந்து போயின.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இறுதி நேரத்தில் சிகிச்சைக்கு பணமில்லாமல் போக வடிவேல் பாலாஜி இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் வாடிய வடிவேல் பாலாஜி அரசு மருத்துவமனையில் உயிர் இழந்தார்.
இதையடுத்து வடிவேல் பாலாஜியின் உடல் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
அப்போது வடிவேல் பாலாஜியின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாக்ஸின் மீது சாய்ந்து அப்பா எழுந்து வாங்க என அவருடைய மகள் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்குகிறது.
அப்பாவின் பிரிவை தாங்க முடியாத மகள் பெட்டியை தட்டி, தட்டி எழுப்ப முயன்ற காட்சிகள் கொடூரமானது.
“இளமையில் வறுமை கொடியது” என்ற ஒளவையின் மொழிக்கு ஏற்ப மனைவி மற்றும் பள்ளி செல்லும் மகன், மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை கடக்க வேண்டிய வடிவேல் பாலாஜி, சிகிச்சைக்கு பணமின்றி இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழத்தியுள்ளது.