பிணவறை ஸ்டெக்சரில் சடலமாக கிடக்கும் விஜே சித்ரா... மனதை பதறவைக்கும் போட்டோஸ்..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக மக்களின் நெஞ்சங்களை கவர்ந்த விஜே சித்ரா இன்று அதிகாலை நாசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தான், ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் ஜனவரி மாதம் திருமணத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஷூட்டிங் முடிந்து நசரத்பேட்டை ஓட்டலில் தங்கிய சித்ராவுடன் அவரது வருங்கால கணவர் ஹேம்நாத் தங்கியுள்ளார். ஆனால் சித்ரா குளிக்கச் செல்வதால் ஹேம் நாத் வெளியே அனுப்பியதாகவும், அதன் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது சித்ராவின் சடலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சித்ராவிற்கும் - ஹேமத்திற்கும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி பதிவு திருமணம் முடிந்து விட்டதாக, போலீஸ் விசாரணையில் ஹேமத் தெரிவித்துள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமணமாகி 7 ஆண்டுகளுக்கும் மணப்பெண் இறந்தால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடுவது வழக்கம். அதன்படி முகப்பேர் மேற்கு கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தாய் தெரிவித்துள்ள நிலையில், சித்ராவின் தந்தையும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசாரும் துருவி, துருவி ஹேமத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் சித்ராவின் கன்னம் மற்றும் தாவாக்கட்டையில் உள்ள ரத்த காயங்கள் உண்மையில் இவர் மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டாரா என ரசிகர்களையே சந்தேகமடைய செய்துள்ளது.
சித்ராவின் இந்த திடீர் மரணம் குறித்து அறிந்த அவரது நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு படையெடுத்து வருகிறார்கள்.
தற்போது போஸ்ட் மாடம் செய்வதற்காக பிணவறையில் ஸ்டெச்சரில் பிணமாக படுத்திருக்கும் சித்ராவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
விதவிதமான உடையில் அழகு தேவதையாக வலம் வந்த சித்ராவை இப்படி பார்க்க மனதே பதறுகிறது அந்த புகைப்படம் இதோ...