திடீர் என இரண்டு வாரம் நிறுத்தப்பட்ட விஜய் டிவி சீரியல்..! அதிர்ச்சி தகவல்..!
விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் திடீர் இரண்டு வாரம் மட்டுமே நிறுத்தப்படுவதாக இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்டெபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகியுள்ள தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர் என்கிற சீரியலும் ஒன்று.
இந்த சீரியலில் ஜாக்குலினுக்கு ஜோடியாக சித்தார்த் நடித்து வருகிறார்.
thenmozhi
thenmozhi ba
அதில் அவர் கூறியுள்ளதாவது, எல்லோரும் எனக்கு மெசேஜ் செய்து தேன்மொழி பி.ஏ சீரியல் நிறுத்தப்பட்டு விட்டதா என கேட்கிறார்கள். சீரியல் நிறுத்தப்படவில்லை, ஒரு சில காரணங்களால் ஒளிபரப்பாகாமல் உள்ளது. 18 ஆம் தேதியில் இருந்து மீண்டும் ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்டெபியின் பதிவு மூலம் பல சீரியல் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.