ஒர்க்அவுட் ஆகுமா விஜய் சேதுபதியின் ஒரு மணிநேர புது முயற்சி..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
கொரோனா பிரச்சனை தலை தூங்கியதால், எடுத்து முடிக்கப்பட்ட பல படங்கள் வெளியாகாமல் உள்ளது. தற்போது உருமாறியுள்ள கொரோனா வேகமாக பரவி வருகிறது என கூறப்படுவதால், அடுத்த ஆண்டு மீண்டும் கொரோனா பிரச்சனை அதிக அளவில் தலை தூக்குமா என்கிற அச்சமும் நிலவி வருகிறது. எனவே அனைத்தும் டிஜிட்டல் மையமாக மாறி வருவது அனைவரும் அறிந்தது தான்.
எனினும் தற்போது தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்க பட்டு வருகிறார்கள். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்த வருட பொங்கலுக்கு, விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' மற்றும் 'சிம்பு' நடித்து முடித்துள்ள 'ஈஸ்வரன்' ஆகிய படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை கூட துணிந்து செயல்படுத்தி வரும் விஜய் சேதுபதி, புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.
தன்னுடைய நிறுவனம் சார்பில் ஒருமணிநேர வெப் திரைப்படம் ஒன்றை தயாரித்து நடிக்க உள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு மணி நேரம் மட்டுமே ரன்னிங் டைம் கொண்ட இந்த வெப் திரைப்படத்தின் டைட்டில் ’முகிழ்’ என தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார் விஜய்சேதுபதி.
இந்த திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடிக்க உள்ளார் என்றும், கார்த்திக் என்பவர் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெண் இசையமைப்பாளர் ரீவா இசையில், சத்யா ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் திரைப்படம் விரைவில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.